பில்லா 2007



பழைய கதை தான் என்றாலும் புதிய விதமாக திரைக்கதையை அமைத்ததில் அசத்தி இருக்கிறார்கள். பழைய பில்லாவில் இருந்த "தேங்காய் சீனிவாசன்" கேரக்டர் மிஸ்சிங் என்றாலும் பெரிய வித்தியாசம் எதும் இல்லை. கதைகளம் முழுவதும் மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ளதால் கூடுதல் பிரமாண்டமாய் இருக்கிறது.

அஜீத் பிரமாண்டத்திற்கு கரெக்டாக பொருந்தியிருக்கிறார். நமீதாவை மிஞ்சும் முயற்சியில் நயன் வெற்றி பெறுகிறார். போலிஸாக பிரபு அந்த அளவுக்கு பொருத்தமாக இல்லை என்றே சொல்லலாம். சில இடங்களில் போலிஸா என்பதை மறந்தது போல் வசனங்கள்.





இயக்குனர் விஷ்ணுவர்தன் கலக்கியிருக்கிறார். கேமரா கோணங்களும், படமாக்கப்பட்ட விதமும் அசத்தியிருக்கிறார் இயக்குனர். இதைபார்க்கும்போது ஷங்கரின் சில படங்கள் பிரமாண்டம் என்று வந்துள்ளதில் என்ன பிரமாண்டம் என்ற கேள்வியே எஞ்சுகிறது. செலவு செய்ததை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார் இயக்குனர்.

படத்தில் ஒரிஜினல் பில்லா சாகும் வரை வசனங்கள் குறைவு, விறுவிறுப்பு அதிகம். அதன்பின் சிறிது விலகி, வேலு, சந்தானம் கலகலக்க வைக்கின்றனர். "அவரு ஆறு தல, நான் ஒரே தல" போன்ற வசனங்களை தவிர்த்திருக்கலாம். இவை பில்லா என்ற கெத்தில் இருந்து விலகி எப்போதும் போன்ற சாதாரண படமாகவே காட்டுகின்றன. இவ்வளவு செய்தவர்கள் பாடல்களுக்கு இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.



கடைசி 15 நிமிடத்தில் சிறிது சலிப்பு ஏற்படுகிறது என்றாலும் படத்தின் பிரமாண்டம், அஜீத் நடிப்பு, நயந்தாராஆஆஆ என படம் வெற்றி படம் தான்.








என்ன ஒரே ஒரு குறை நயன்தாராவுக்கு ஒரு சண்டைகாட்சி வைத்திருக்கலாம்.

குட்டீஸ் எப்படியெல்லாம் இருக்காங்க - என்னத்த சொல்ல...

மலர்கள் - PIT போட்டிக்கு







மேலிரண்டும் போட்டிக்கு...


மற்ற படங்கள்...












பொல்லாதவன் - என் பார்வையில்...


தீபாவளிக்கு திரைக்கு வந்து வெற்றிகரமாக(?!) ஓடிக்கொண்டிருக்கும்
"அழகிய தமிழ் மகன்", "கண்ணாமூச்சி ஏனடா" போன்ற மிகச்சிறந்த படங்கள ஓசில பாக்குற வாய்ப்பு கிடைச்சப்ப கூட ஒடம்பு சரியில்லை அப்படிங்கிறத காரணமா வச்சு படம் பாக்க போகாம தப்பிச்சுட்டேன். ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சே அப்படினு நெனச்சு சந்தோசபட்டுகிட்டி இருந்தேன்.ஆனா விதி வலியதுங்கிறது கண்பார்ம் ஆயிடுச்சு.

ஏதோ இப்ப கொஞ்சம் காய்ச்சல் எல்லாம் சரியாயிடுச்சு அப்படினு சந்தோசமா இருந்தப்ப நம்ம நண்பன் அதான் இப்போ சரியாயிடுச்சுல்ல வா எதாவது படத்துக்கு போலாம்னான். ஏண்டா "அழகிய தமிழ் மகன்", "கண்ணாமூச்சி ஏனடா" படத்த பாத்துட்டு வந்தும் மறுபடி படத்துக்கு கூப்பிடுறயே உனக்கு ரொம்ப தான் தைரியம்னு சொன்னதுக்கு, சினிமாவுல இதெல்லாம் சாதாரணம்டா அப்படிங்கிறான். ஒரு வழியா மனச தேத்திகிட்டு போலாம்னு முடிவு பண்ணி என்னா படம்னேன். "பொல்லாதவன்" அப்படினான். ஏண்டா என் செலவுல எனக்கே சூன்யம் வைக்க பாக்குறியே அப்படினு டென்சன் ஆயிட்டேன்.

ஏற்கனவே "சுள்ளான், புதுகோட்டையிலிருந்து சரவணன்" போன்ற சிறப்பான படங்கள பாத்த அனுபவம் இருந்ததால கண்டிப்பா முடியாது தயவு செஞ்சு என்ன விட்ரு அப்படினு அழாதகுறையா கேட்டேன். ஆனா கண்டிப்பா வந்தே ஆகனும்னு சொல்றான். சரி நடப்பது நடக்கட்டும்னு வரேன்னு சொல்லிட்டேன், ஆனாலும் உள்ள ஒரு பயம். சரி நம்ம மக்கள் விமர்சனம் எழுதியிருப்பாங்களே அப்படினு தேடி புடிச்சு படிச்சதுல ஓரளவு நல்லா தான் எழுதியிருந்தாங்க.ஓரளவுக்கு மனசு சமாதானமாச்சு. 6.30 ஷோக்கு 6 மணிக்கு போனா எல்லாம் ஹவுஸ்ஃபுல்னு போட்டிருந்தான். அப்பாடி தப்பிச்சோம்னு ரொம்ப குஷியாயிட்டேன். இந்த ஷோ போனா போகுது அடுத்த ஷோ இருக்குதுல்ல அப்படினு 9.45 ஷோக்கு டிக்கட் வாங்கிட்டு வர்ரான். சரினு விதிய நெனச்சு நொந்துகிட்டே ரூம்க்கு வந்துட்டோம்.

9.30 க்கு தியேட்டருக்கு போனா அப்பவும் ஹவுஸ்ஃபுல்னு போர்ட பாத்ததும் ஒரு வேள படம் நல்லாஇருக்குமோனு லைட்டா ஒரு டவுட் வந்திடுச்சு. உள்ள போய் ஒக்காந்து படம் போட்டாங்க, மொத சீன், ரெண்டு பேர் மாடிபடில வேகமா ஏற்றாங்க, கேமரா ஆட்டத்த பாத்ததும் படம் முழுதும் இப்படிதான் இருக்குமோன்னு மறுபடி மனசுக்குள்ள கலவரமாயிடுச்சு. ஒரு 15 நிமிடம் கொஞ்சம் கடியாத்தான் போச்சு, அதுக்கப்புறம் கொஞ்சம் நார்மலா போக ஆரம்பிச்சது. தறுதலையா சுத்தர பையன், அவனிடம் அப்பா கேள்வி கேட்க இருவர்க்கும் சண்டை. வேலைக்கு போகாமா ஏண்டா வீணா சுத்திகிட்டு இருக்க அப்படினு கேக்க, தன் நண்பர்களின் பெற்றோரை சுட்டி காட்டி அவர்கள் அவ்வளவு பணம் செலவு செய்து படிக்க வைத்தார்கள், அதனால அவங்க வேலைக்கு போறாங்க நீ எனக்காக என்ன செலவு செஞ்ச? அப்படினு கேட்க. அடுத்த நாளே தன்னால் முடிந்த 70,000 பணத்தை கொடுத்து, என்னால இவ்வளவு தான் முடியும் இத வச்சு என்ன பண்ணமுடியுமோ பண்ணிக்கோ என்று கூறிவிடுகிறார். பணம் கையில் வந்ததும் எதையும் யோசிக்காமல் தன் கணவான பல்சர் வண்டி வாங்கி வர, அம்மா பானுபிரியா எதாவது உறுப்படியா செய்டானு பணத்த கொடுத்தா இப்படி வண்டிய வாங்கிட்டு வந்து நிக்குறானேனு பதறுகிறார். வண்டி இல்லைனா யாரும் வேலை தரமாட்டாங்க என்பது தனுஷின் பதில். இரண்டரை வருடமாக பேசாத காதலி(?!) பைக் வாங்கியதும் காலேஜ்ல டிராப் பண்ண சொல்லி கேக்குது.

நம்ம ஹீரோ வேலைக்கு போறார், அந்த பணத்துல காதலிக்கு பரிசு வாங்கிகொடுத்துட்டு, காதலிய டிராப் பண்ண போறார். அங்க வண்டிய தொலச்சுட்டு அத கண்டுபிடிக்க போய் அந்த ஏரியா ரவுடிங்க கூட பிரச்சனை ஆகுது. அவங்க அண்ணன் - தம்பி பிரச்சனையில் தம்பியே அண்ணனை போட்டு தள்ளிட்டு அத தனுஷ்தான் செய்ததா செல்லி மாட்டி விட, தன்னை கொல்ல வர்ரவங்ககிட்ட இருந்து தப்பிக்க இவரே கொலை செய்ய வேண்டியதாயிடுது.

ஹீரோயின் என்ற பெயரில் திவ்யா அவ்வப்போது வந்து போகிறார். ஹீரோயினுக்கு அப்பா, அம்மாவே இல்லையா என்ற குறையை போக்க இரண்டு சீனில் வந்து போகிறார்கள். தமிழ்சினிமாவின் காதல் கெமிஸ்டிரி என்னானு புரியல. நம்ம தொழிலுக்கு குறுக்க வர்ரவன மட்டும் தான் போட்டு தள்ளனும், வீணா பப்ளிக்க டிஸ்ட்ரப் பண்ண கூடாதுங்குற வில்லன் லாஜிக் சூப்பர். பாலாஜி அண்ணனை கொன்று விட அண்ணி கதறி அழும் காட்சியை குறைத்திருக்கலாம். சோகத்திற்கு பதிலாக வெறுப்பே மிஞ்சுகிறது.

ஜி.வி. பிரகாஷ், யோகி-பி இசையில் "எங்கேயும் எபோதும்" ரீமிக்ஸ் பாடல் ஒன்று மட்டும் தான் மனதில் நிற்கிறது.(இடைஇடையே ஆங்கில + புரியாத வார்த்தைகளை சேர்த்து விடுவதுதான் ரீமிக்ஸா???)

வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, இராத்திரி சென்னை என ஒளீப்பதிவு நல்லா வந்திருக்கு.

அப்புறம் ஒரு டவுட்டுங்க, ஒரு குருப்பா 2-பீஸ்ல பொண்ணுங்கள ஆடவுட்டுட்டு வில்லன் கைல முடிய முடிய பியர் பாட்டில கொடுத்துட்டா வில்லன் கோபமா இருக்கானு அர்த்தமா?.

படம் முடிஞ்சு போகும் போது நண்பன் சொன்னது, என்னடா படம் எடுக்குறானுங்க, எதுக்கு படம் எடுக்குறாங்கனும் தெரியமாட்டேங்குது, ஆனா மத்த 2 படத்துக்கு இது கொஞ்சம் பரவால அப்படினான்...

டிஸ்கி: ஒரு போஸ்ட் போடறதுக்கு சான்ஸ் கிடைக்குது அப்படினுதான் படத்துக்கே போனேன்.

நவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்கு




ரோமியோ - ஜூலியட்


நேற்றுதான் ரோமியோ ஜூலியட் காதல், புத்தகம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. படித்து முடித்தவுடன் சிறந்த காதலர்கள், அப்படி, இப்படி என்று ஏன் புகழ்கிறார்கள் என்பதற்கான காரணம் ஒன்றும் விளங்கவில்லை.

ரோமியோ சிறந்த காதலனா?. முதலில் ரோஸலின் என்ற பெண்ணை காதலிக்கிறான். அவள் இவனை கண்டுகொள்ளவே இல்லை. அந்த ஊரில் நடக்கும் ஒரு விருந்துக்கு ரோஸ்லின் வருகிறாள் என்பதை நண்பர்கள் மூலம் அறிந்து இவனும் அந்த விருந்துக்கு செல்கிறான். அங்கு ரோஸலினை விட அழகாக ஜூலியட்டைப் பார்க்க, ஜூலியட்டும் ரோமியோவைப் பார்க்க, இருவர்க்கும் பல்பு எறிந்து, ஒளிவட்டம் தோன்றி காதலாக மாறுகிறது. இருவரும் அவரவர்களின் ஜன்ம விரோதிகளின் வாரிசுகளைத்தான் காதலிக்கிறோம் என தெரிந்தும், அவர்களை காதலே வெல்கிறது. குடும்ப சண்டை காரணமாக ஒன்று சேர முடியாது என்று, ரகசிய திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் முடித்து அவரவர் வீட்டிற்கு திரும்பி செல்கிறார்கள். அப்போது ஜூலியட்டின் சகோதரன், ரோமியோவிடம் வீண் சண்டைக்கு அழைக்க, அந்த சண்டையில் ரோமியோவின் உயிர் நண்பன் கொல்லப்படுகிறான். அந்த ஆத்திரத்தில் ரோமியோ ஜூலியட்டின் சகோதரனை கொன்று விடுகிறான். இதனால் நாடு கடத்தப்படுகிறான். இந்நிலையில் ஜூலியட்டிற்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பெற்றோரிடம் திருமணம் வேண்டாம் என்றும், தனக்கும் ரோமியோவிற்கும் திருமணம் நடந்துவிட்டதும் என்று கூறுகிறாள். ஆனால் அவர்கள் கேட்பதாய் இல்லை. இதனால் திருமணம் செய்து வைத்த பாதிரியாரின் உதவியை நாடி செல்கிறாள்.

பாதிரியாரின் யோசனைப்படி மயக்க மருந்தை சாப்பிட்டு விட்டு இறந்தது போல் இருக்க, இறந்துவிட்டாள் என எண்ணி சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்கின்றனர். இவை எல்லாம் ஒரு நாடகம், நீ வந்து ஜூலியட்டை அழைத்து செல் என கடிதம் ஒன்றரை ரோமியோவிற்கு அனுப்புகிறார் பாதிரியார். ஆனால் சூழ்நிலை சந்தர்ப்பத்தால் அக்கடிதம் போய் சேரவில்லை. ஆனால் ஜூலியட் இறந்துவிட்டாள் என்று செய்தி மட்டும் வேறொருவன் மூலம் வந்து சேருகிறது. உண்மையாகவே இறந்துவிட்டாள் என்று எண்ணி, கல்லறை சென்று அவளின் முகத்தை பார்த்துவிட்டு விஷம் குடித்து இறந்துவிடுகிறான். அப்போது ஜூலியட்டும் மயக்கம் தெளிந்து எழுகிறாள். ரோமியோ இறந்தது கண்டு தானும் வாளை மார்பில் செறுகிக்கொண்டு உயிர்விடுகிறாள்.

அப்போது அங்கு வந்த எல்லொரிடமும் (இருவரின் பெற்றோர் உட்பட), பாதிரியார் நடந்ததை கூறுகின்றார். இரு குடும்பமும் தன் பழைய பகையை மறந்து நண்பர்களாகின்றனர். இவர்களின் காதலை போற்றும் விதமாக ஊரில் நடுவில் இருவர்க்கும் சிலை வைக்கிறார்கள்.


எனக்குள் இருந்த கேள்வி கண்ணாயிரம் விழித்துக்கொண்டு கேட்ட சில கேள்விகள்:

1.ஜூலியட்டை விட அழகான பெண்ணை கண்டிருந்தாள் அவளை காதலித்திருக்க மாட்டான் என்று என்ன நிச்சயம்.

2. காதலித்து சிறிது நாட்கள் தான் என்பதால் புதிய காதலின் வேகம் அது. நாட்கள் செல்ல செல்ல காதல் மாறி இருக்கலாம் அல்லவா?

3. வாழாமல் அற்ப ஆயுளில் முடிவது தான் சிறந்த காதலா?.

எங்க போறீங்க?. பதில் சொல்லிட்டு போங்க...

படியில் பயணம் நொடியில் மரணம்....

"படியில் பயணம் நொடியில் மரணம்" இது நம்ம ஊர் பேருந்துகளில் இருக்கும் வாசகம். இத படிச்சுகிட்டே நம்ம மக்கள் படியிலேயே தான் பயணம் செய்வாங்க.



படியில் தான் நிற்பேன் என்று இருப்பவர்களுக்கு அரசு புது வகையில் பேருந்துகளை இயக்குகிறது.

.
.
.
.
.
.
.
.
.
.
.





இப்போ என்ன பண்ணுவாங்கோ....

இப்போ என்ன பண்ணுவாங்கோ......

நோ ஃபீலிங்ஸ்...







எப்போதும்
விட்டு விலக கூடிய
ஆயத்த நிலையில் தான்
இப்போது இருப்பவர்களும்...

இவர்களைப் பற்றியோ
முன் சென்றவர்கள் பற்றியோ
கவலை ஏதுமில்லை
இதுவரை என்னிடத்தில்...

இருந்த போதிலும்
'அந்த' பெயர் தான்.
யோசிக்க வைக்கிறது
எல்லாவற்றையும் நிறுத்த
முடிவெடுத்தாகி விட்டது.
இதோ செல்கிறேன்...




நாளை முதல்
'நோ' சொட்டை
ஒன்லி மொட்டை...

மாறாத ஒரு புன்னகை

தவிப்போ
எவ்வித சோகமோ இல்லாமல்
இனிமையாகவே அமைந்துவிடும்
தொடக்கங்களாக
எதிர்பார்க்கிறேன்
பிரிவிலும் ஒரு புன்னகை...

உறுதியான முடிவுகளும்
பொருளுணர்ந்த பிரிவுகளும்
சூழ்நிலையில்
துயரமாகவே அமைய
கை கோர்த்து நடந்த தருணங்களையும்
பேசிச் சிரித்த பொழுதுகளையும்
நினைத்து சிரிக்க முற்படுகையில்
உனை
பார்வையிலிருந்து
மறைக்கிறது கண்ணீர்...

எல்லாம் மறைத்து
கை கொடுத்து
வழி அனுப்பும் வேளையில்
எதையோ உணர்த்த
கையில் பட்டு தெறிக்கிறது
கண்ணீர்...

நினைப்பது போல்
அமைவதில்லை வாழ்க்கை
கவிதையும் கூட...

குண்டாவது எப்படி???....


குண்டாவது எப்படி???....

நான் 10-ம் வகுப்பு படிக்கும் போது நல்லா குண்டா இருந்தேன். அதற்கப்புறம் கொஞ்சம் இளைத்து சரியான அளவு இருந்தேன்.

அப்படியே கல்லூரி நாட்களிலும் தொடர்ந்ததால் எந்த கவலையும் இல்லை. ஆனா என்னிக்கு சென்னை வந்து ஓட்டலில் சாப்பிட ஆரம்பிச்சேனோ அப்ப இருந்து கொஞ்சம் கொஞ்சமா மெலிய ஆரம்பிச்சுடுச்சு உடம்பு. எனக்கு அப்படியே இருப்பது போல தான் தெரியுது.

ஆனா ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போது, ஏண்டா இப்படி ஆயிட்ட என்று கேட்கிறார்கள். இப்படி எல்லாரும் ஊருக்கு போகும்போதும் கேக்கிறதால டென்சன் தான் ஆகுது. இப்படிதான் நேத்து ஊருக்கு போயிருந்த போதும் இப்படி பிரச்சனை ஆரம்பிக்க நான் அடுத்த முறை ஊருக்கு(2 மாதம் கழித்துதான் போவேன்) வரும்போது குண்டாதான் வருவேன் அப்படினு சவால்(?!) விட்டுட்டு வந்துட்டேன்.

ஆனா என்ன பண்றதுனு ஒன்னும் புரியல. ஊரில் இருந்து வந்ததிலிருந்து ஆபிஸ்ல எல்லோரிடமும் கேட்டால் ஆளுக்கு ஒரு ஐடியா கொடுக்குறாங்க. கடைசில ஒருத்தன் வந்து ஏண்டா, பிளாக்ல மேட்டரே இல்லாம பதிவு போடுறீங்களே, அதுக்கு பதிலா இது போல உருப்படியான(?!) பதிவு ஏன் போடகூடாது கேட்டான்.

அப்புறம் தான் நம்ம பதிவுலகில பல ஜாம்பவான்கள் முதல் ஒல்லிபிச்சாண்டிகள் வரை எல்லா வகையிலும் இருக்கிறார்களே கேட்டால் ஐடியா கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதை கேட்கிறேன்.


"குண்டாவது எப்படி???"

நான் கேள்விபட்ட சில வழிகள்:-

1. தினமும் மூன்று வேளையும் நல்லா சாப்பிடனும். சாப்பிட்ட உடனே தூங்கிடனும். இப்படி தினமும் செஞ்சா ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்குமாம்.

2. கவலைகளை மறந்து இருக்கனுமாம். கவலை இருந்தாவே உடல் நலமாக இருக்காதாம்.

3. "குடிமகன்" ஒருத்தர் கொடுத்த ஐடியா, வாரம் ஒரு பீர் சாப்பிட நல்லா குண்டாயிடலாம் என்றார். அதற்கு அடிமையாயிட்டா என்ன பண்ணனு கேட்டதுக்கு, அதுக்கு தனியா ட்ரீட்மெண்ட் பண்ணிக்கலாம்கிறார்.

4. பாலும் தேனும் கலந்து குடிச்சா நல்ல பலன் இருக்கும்னு சொல்றாங்க.

டிஸ்கி: மக்கா, இதுல குண்டாவதற்கும் ஐடியா கொடுங்க, அப்படியே குண்டாயிட்டா ஒல்லியாவதற்கும் ஐடியா கொடுங்க....

ஏன்னா, நீங்க கொடுக்குற ஐடியாவுல ஓவரா குண்டாயிட்டா, ஒல்லி ஆவுரது எப்படினு தெரியனுமில்ல அதுக்கு தான் இந்த முன்னெச்சரிக்கை....

உன் நினைவு...


ஆம்!
கொஞ்ச நாட்களாய் தான்
எந்த சூழ்நிலையில்
எப்படி இருந்தாலும்
'அந்த' பாடலை கேட்கும் போது
நீ தான்
நீ மட்டும் தான்
மனதில் தோன்றி
மறையாமல் நிற்கிறாய்...

விழுங்க முடியாத வேதனையில்
தவிக்கிறேன்
துடிக்கிறேன்.

தொலைவில் இருந்து கொண்டு
தொல்லைதான் தருகிறாய்
நினைவில்...

இம்சையாய் இருக்கின்ற போதும்
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்...

பாடல் முழுவதையும்
கேட்க வேண்டுமென
ஆசைதான்.
ஆனால்
முதல் வரியின் தொடக்கத்திலேயே
உன்னில் மூழ்கி
பாடலை மறக்கிறேன்.
மீண்டும் கேட்க எத்தனிக்கையில்
மீண்டும்
அதே தொடக்கம்
அதே உன் நினைவு....

பதிவர் பட்டறை


சென்னை வலைபதிவர் பட்டறை ஆகஸ்ட் 5, நண்பர்கள் தினத்தில் நன்றாக நடந்தது. கலந்து கொண்டவர்கள், கலந்துகொள்ள முடியாதவர்கள் என பல நண்பர்கள் கடந்த 50 நாடகளாக அயராது உழைத்துள்ளனர்.

பெரிய அளவில் எதையும் செய்யாத போதும் 'சாட்'டில் மட்டுமே பேசிக்கொண்டிருந்த பல நண்பர்களை நேரில் சந்திக்க பெரிய வாய்ப்பாக அமைந்தது. புதிதாக வந்தவர்கள் மெயில் ஐடி துவங்குவது முதல் பதிவு எழுதுவது வரை அதிக ஆர்வம் காட்டினார்கள்.

நான் மேலே கணினி அறையில் இருந்ததால் அங்கே நடந்த சில நிகழ்வுகள்:

முதல் நாள், சனிக்கிழமை மாலை 4.30 க்கு அங்கு செல்வதற்கு முன்பாகவே சிவக்குமார், வினையூக்கி, ஜெயா, லக்கிலுக், மற்றும் சில சென்னை பலகலைகழக ஆசிரியர்கள், மாணவர்கள் அங்கிருந்தனர். சிறிது நேரத்தில் கணினிகள் வந்தவுடன் மா.சி என்னையும், வினையூக்கியையும் மேல்தளத்திலிருந்து கவனித்துக்கொள்ள சொன்னார். அதற்கு முன்பே SIFY நிறுவனத்தினர் அங்கு வந்து இணைய வசதிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். பின் கணினி கொண்டுவந்தவர்களுடன் இணைந்து எல்லா கணினிகளையும் மேல் தளத்திற்கு எடுத்து சென்றோம். அங்கு வகுப்பில் இருந்த இருக்கைகளை கணினி வைக்க வசதியா மாற்றி அமைத்தோம். பின் தான் தெரிந்தது, கணிகளுக்கு மின்சாரம் கொடுக்க வச்தியாக Extension Boxes எதுவும் இல்லை.

அப்போது விக்கியும் வந்திருந்தார். பிறகு அவர் தன் நண்பரிடம் கேட்க, நந்தா சென்று எடுத்து வந்து 8 மணிக்கு கொடுத்தார். அதற்குள் அருள் தன் அலுவலகத்திலிருந்து காப்பி இயந்திரம் எடுத்து வந்திருந்தார். அதற்குள் சுந்தருடன் இணைந்து சில பேனர்களை ஒட்டினோம். Extension Boxes வருவதற்குள் கணினிகளை எடுத்து வரிசைப்படுத்தி வைத்திருந்தனர், அதனை பராமறிக்க வந்திருந்தவர்கள். பின் கணினிகளை இணைத்து ஆன் செய்தால் பல கணினிகள் ஆன் ஆகவில்லை. இனையமும் சரிவர இயங்கவில்லை. பின் ஒவ்வொன்றாக சரி செய்யவேண்டியதாயிற்று.

அப்போதும் Extension Boxes பத்தாத்தால் ஒரு கணினியை சரிபார்த்து, அதை ஆஃப் பண்ணிவிட்டு, வயரை எடுத்து அடுத்த கணினியில் சொறுகி அதை சரி செய்ய வேண்டும். ஒன்னு சிஸ்டம் பூட்டே ஆகாது, இல்லைனா நெட் கனெக்ட் ஆகாது. இப்படியே ஒவ்வொரு சிஸ்டமா செக் பண்னுவதற்குள் போதுமென்றாகிவிட்டது.

மணி 9.30 க்கு மேல் ஆக, காலையில் சீக்கிரம் வர வேண்டுமே என்று ஒவ்வொருவராக கிளம்பிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் சென்றவுடன் நானும் கணினி கொண்டுவந்தவரும் சரி செய்து கொண்டிருந்தோம். 3 கணினிகளைத் தவிர எல்லா கணினிகளையும் சரி செய்துவிட்டோம். ஒரு கணினிக்கு வேறொன்று நாளை கொண்டுவருகிறேன் என்றார், மற்ற இரண்டை காலையில் சரி செய்து விடுகிறேன் என்றார். சரி என்று அவர் கிளம்பிய உடன் கீழே ஆடிட்டோரியம், மேலே இருந்த கணினி அறைகளை பூட்டிவிட்டு கிளம்பினேன். பல்கலைகழக பாதுகாவலர் வந்து கோர்ட்டில் சீல் வைப்பார்களே அதுபோல ஒரு பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டு, அதை பூட்டில் ஒட்டிய பின்பு தான் என்னை கிளம்ப விட்டர். இதை நாளை காலை அந்த கண்ணாடி போட்டவர்(மா.சி யை) வந்தால் தான் திறப்போம் என்றார்.

ஞாயிறு காலை, சிவக்குமார், பொன்ஸ் ஆகியோர் சில Extension Boxes கொண்டுவந்தார்கள். உண்மைத்தமிழன், தகடூர் கோபி, மற்றும் அதியமான் டெஸ்க்கை சரி செய்து கணினிகளை வரிசைப்படுத்த மிகவும் உதவினார்கள். பின் தான் எல்லா கணினிகளிலும் எ-கலப்பை நிறுவ வேண்டியதாயிற்று. 9 - 9.30 க்குள் 5 முறைக்கு மேல் மின்சாரம் நின்று வந்ததால், கொஞ்சம் கலக்கம் ஆகிவிட்டது. பின் எதுவும் பிரச்சனை இல்லாமல் சென்றது. அவ்வப்போது வகுப்புகளில் ஏற்பட்ட கணினி பிரச்சனை, இணைய பிரச்சனையை வந்திருந்த பராமறிபாளர்கள் விரைவாக சரி செய்து நல்ல முறையில் நடைபெற மிகவும் உதவி செய்தார்கள்.

பட்டறையில் சில:

பலர் எப்படி இ-கலப்பையை இன்ஸ்டால் பண்ண வேண்டும், அதை பயன்படுத்தி எப்படி தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும் கேட்டு தெரிந்துகொண்டனர்.

எப்படி மெயில் அக்கவுண்ட் திறக்க வேண்டும், எப்படி புதிதாக பிளாக் எப்படி நிறுவ வேண்டும் என்று கேட்டு தெரிந்துகொண்டனர்.
சில பதிவர்கள் தங்களுடைய பதிவுகளில் இருந்த ஐயங்களை கேட்டு தெளிவு படுத்திகொண்டனர்.

அங்கிருந்தவர்களை அதிகம் கவர்ந்தது, சங்கத்து ஆட்கள் அனைவரும் ஒரே மாதிரி உடையில் வந்தது. பின் அதென்னங்க "வ. வா. ச." என்று கேட்டு தெளிவு படுத்திக்கொண்டனர்.

என்னிடம் அட்டை இல்லாததால், ஒருவர் "நீங்களும் கலந்துகொள்ள வந்திருக்கீங்களா?" என்ற போது, இல்லீங்க, நான் ஏற்கனவே பதிவு எழுதுகிறேன், இங்கே சொல்லிதர வந்தேன், என்றேன். அதற்கு அவர் நம்பாதது போல் உங்க பதிவு முகவரி சொல்லுங்க என்றார். நான் என் பதிவை காட்டிய பின்பும் கூட அவர் பார்த்த பார்வை என்னை நம்பவில்லை என்று தெரிந்தது.

இவை எல்லாவற்றையும் விட என்னை கவர்ந்தது, அங்கு கணினிகளை பராமரிக்க மற்றும் இணையத்தை சீர்படுத்த SIFY-ல் இருந்து வந்திருந்த நண்பர்கள், விழா முடியும் வேளையில், எப்படிங்க தமிழில் எழுதுவது, எப்படி பிளாக் ஆரம்பிப்பது என்று கேட்டதுதான்.

மேலும் பலர் பொதுவாக கேட்டது, எங்களுக்கு சந்தேகம் வந்தா எப்படி உங்கள கேக்கிறது என்பதுதான்.

எல்லாம் முடிந்து கிளம்பிய விட்டோம், பின் அங்கே பல உதவிகளை செய்த குமார் என்பவருக்கு நன்றி சொல்ல அலைபேசியில் அழைத்த போது, "ரொம்ப நன்றிங்க, ரொம்ப நல்லாயிருந்தது, கூடிய சீக்கிரம் நாங்களும் பதிவு எழுதுறோம், எழுதிட்டு சொல்கிறோம்" என்று முகவரியும் வாங்கிக்கொண்டார்.

பல புதிய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.

பட்டறை பலருக்கு பலவித எண்ணங்களை விதைத்திருந்தாலும், நமக்கும் சில விசயங்களை தெளிவு படுத்தியுள்ளது.

அடுத்த பட்டறை கணினிகளை வைத்து வகுப்புகள் இருந்தால் எப்படி அமைக்க வேண்டும் என்ற நல்ல தெளிவு கிடைத்துள்ளது.
மேலும் வந்திருந்தவர்களை அதிகம் கவர்ந்தது சங்கத்தினர் அனைவரும் ஒரே மாதிரியான உடையில் வந்ததே!.

சென்னை வலைபதிவர் பட்டறை - புகைப்படங்கள்

சென்னை வலைப்பதிவர் பட்டறை:
சில புகைப்படங்கள்:



சென்னைப் பல்கலைகழக மெரினா வளாக முகப்பு



சென்னை பல்கலைகழகத்தில் கலந்துரையாரல் நடைபெற அளிக்கப்பட்ட அரங்கு (குளிர்சாதன வசதியுடன்)



எதையோ தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருந்த 'தல'



'சிபி'க்கு மட்டும் 'தல' கொடுத்திருந்த சட்டை



பினாத்தலாரின் வகுப்பில் நல்ல பிள்ளளயாக நடிக்கும் 'தல'



என்னுடை பார்வையில் மேலும் தகவல்களை அடுத்த பதிவில்...

முடிவு தரும் மரணம்


என்றாவது
தேடல்கள் இல்லாதிருப்பேன்.
தேவை இன்றி அல்ல...
தேவையே இல்லாமல்...

என்னுடைய வாழ்க்கை
தேவை
தேடல் என
சுவாரஸ்யமாக இருக்கிறது.

தேவையின் அவசரம்
தேடலை முடுக்குகிறது.
கிடைத்ததன் திருப்தி
இன்றுவரை இல்லை...

அடுத்த தேடலை நோக்கியே
அவசர வாழ்க்கை...
ஆசை என்றில்லாமல்
அவசியம் என்றே
தீர்மானிக்கப்படுகின்றன
தேடல்கள் அனைத்தும்.

மனமென்ற குரங்கு
தாவிக்கொண்டே இருக்கிறது
இருப்பினும்
என்றாவது
தேடல்கள் இல்லாதிருப்பேன்.
தேவை இன்றி அல்ல...
தேவையே இல்லாமல்...

விடாது சரக்கு...

உன்னைத் தேடி
எப்போதும்
என் பயணம்
அமைவதில்லை
வழியில் காணும் போது
உனக்காக
காரணம் அமைத்து
நுழைகிறேன் உள்ளே!


இதுதான் வேண்டுமென்று
எப்போதும் சொன்னதில்லை
இருப்பதை வைத்து
சந்தோசப்படும் மனம்
இங்கு மட்டுமே!


ஒத்துக்கொள்ளாத போது
போன வேகத்தில்
வெளியே வந்தாலும்
ஏற்றுக்கொள்கிறேன்
சுயநினைவில்லா
சுரணையோடு....


காலம் கடக்கும் வேளையில்
விரட்டப்பட்டு
இருப்பிடம் நோக்கி
எழுந்து நடக்கிறேன்
தள்ளாடியபடியே
டாஸ்மார்க்கிலிருந்து.....

மலர்களே! மலர்களே! மலருங்கள்







புகைப்பட போட்டிக்கு

புகைப்பட போட்டிக்காக எல்லோரும் புகைப்படம் எடுத்து போடறாங்க. நம்மளும் போடலாமே அப்படினு நான் கிளிக்கிய ரெண்டு புகைப்படங்கள்.

ஏற்காடு சென்றபோது அங்கே மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஒரு மலர்.



இது தஞ்சாவூர் சென்றபோது, அரண்மனை வளாகத்தில் ஒரு தாய் ஆடு குட்டிகளுக்கு பால் கொடுத்த காட்சி

இராஜ ராஜ சோழன் நான்
என் தஞ்சை அரண்மனை

அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள அமைப்பு விளக்கப்படம்
மணி மண்டபம்
மணி மண்டபம் சுற்றி சுற்றி கட்டப்பட்டுள்ள முறை அழகாக இருக்கிறது. அந்த சிறிய படிகட்டில் நாம் செல்வதே சிரமமாக உள்ளது, அப்போது அவர்கள் எப்படி சென்றார்கள் என்பது வியப்பாக உள்ளது.
சத்திரபதி சிவாஜியின் காசுகள்

தம்புரா மற்றும் வீனை
தர்பார் ஹாலில் மேற்கூரை வண்ண ஓவியங்கள்

தர்பார் மஹால் பெரியதாக உள்ளது. மேற்கூரையில் உள்ள வண்ண ஓவியங்கள் இன்னும் பிரகாசமாக ஜொலிக்கின்றன. இவை சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது, நிறைய ஓவியங்கள் அழிந்தும், அழிந்துகொண்டிருப்பதையும் காண முடிகிறது.
மணி மண்டபம் முன் இருந்த சிலை
மணி மண்டபத்திலிருந்து பெரிய கோவில்
அரண்மனையை சுற்றிப்பார்க்க சிறியவர்க்கு ரூ. 5, பெரியவர்களுக்கு ரூ.10, புகைப்படம் எடுக்க ரூ.30, வீடியோ புகைப்படம் ரூ.150 என பணம் வசூலிக்கிறார்கர்கள். இதையே ஒரு அரண்மனையின் பல இடங்களில் வசூலிப்பதுதான் கொடுமையாக இருக்கிறது.

அரண்மனை கட்டிட அமைப்பு நம்மை வியக்க வைக்கிறது. சில பகுதிகள் மட்டுமே பராமறிக்கப்படுகின்றன. சில பகுதிகள் செப்பனிடப்படுகின்றன. பல பகுதிகள் கேட்பாரற்று கிடக்கிறது. தர்பார் ஹால் கூட பராமரிக்கப்படுவதில்லை. இப்படியே சென்றால் பாதி பாழடைந்த நிலையில் இருக்கும் அரண்மனை இன்னும் சிறிது காலத்தில் அழைந்துவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.

அரண்மனையில் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. ஆனால் 4,5 படிகளே அதில் இறங்கி பார்க்க முடிகிறது. அதற்கு மேல் உள்ளே செல்ல முடிவதில்லை. வெளிச்சம் இல்லாமலும், பராமறிக்கப்படாமலும் இருக்கிறது.

இராஜ ராஜ சோழன் நான்
நான் ஆண்ட தஞ்சை தேசம் தான்


சென்ற வாரம் அலுவலக நண்பரின் திருமணத்திற்காக தஞ்சாவூர் சென்றோம். அப்படியே தஞ்சை பெரிய கோவில் மற்றும் அரண்மனையை சுற்றி பார்த்துவிட்டு வந்தோம். அதன் சில தகவல்கள் மற்றும் கிளிக்கிய புகைப்படங்கள்.

கோவில் நடையை மதியம் 1.00 மணிக்கு மூடி மாலை 4.30 க்கு தான் திறக்கிறார்கள்.

சாலையிலிருந்து முகப்பு



கோவிலின் முன்புறம் கால்வாய் அமைப்பு
முன்பு கால்வாயாக இருந்திருக்கலாம், ஆனால் இப்போது குப்பைகள் கொட்டத்தான் இதை பயன்படுத்துகிறார்கள் போல. இதை செப்பனிட்டு பராமரித்தால் கோவிலுக்கு இன்னும் அழகு சேர்க்கும்.

கோவில் கட்டியதன் விளக்கப்படம்

இதை கோவிலின் முகப்பு வாயிலிலேயே விளக்கப்படமாக வரைந்து வைத்துள்ளார்கள்.


பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் நந்தி

குதிரை மற்றும் வெள்ளி யாணை வாகனம்


நந்திக்கு வலப்புறம் உள்ள அம்மன் கோவில்
பெரிய நந்தி



கோவிலின் முன்புறம் நிறுத்தி மன்னிக்கவும் கட்டி வைத்திருந்த யாணை. ஆசிர்வாதம் என்ற பெயரில் யாணையை காசு வாங்க வைக்கிறார்கள்.



இரும்புக்குண்டுகள் (கோவிலில் ஒரு மாடத்தினுள் இருந்தது)




அடி தளத்திலிருந்தே கல்லில் சித்திர வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. உற்று நோக்கினால் தான் தெரிகிறது ஒவ்வொரு சிறிய கல்லிலும் ஒவ்வொரு சித்திரம்.
பின்புறமிருந்து கோபுரம்

கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், வலப்புறம் பார்த்து உள்ளது, இடப்புறம் பார்த்து உள்ளது இரண்டுக்கும் சிறு வித்தியாசம் கூட நம்மால் காண முடியாது.

கோவிலில் நான் தெரிந்துகொண்ட ஒரு செய்தி, கோபுரத்தின் நிழல் கீழே விழுமாம், அதில் உள்ள கலசத்தின் நிழல் தான் கீழே விழாது என்று சொன்னார்கள்.

நம்ம ஊர் மக்கள் இதை மற்ற கோவில்களைப் போல்தான் வந்தோமா, வணங்கினோமா சென்றோமா என்று இருக்கிறார்கள். அதில் உள்ள சிற்ப்பங்கள், கட்டிக முறை, ஆகியவற்றை காண்பது இல்லை.

இப்போது கோவிலில் ஆங்காங்கே பல கற்றகள் உடைந்து இருப்பதை காணமுடிகிறது. பராமறிப்பு பணிகளும் நடக்கின்றன. ஆனாலும் கோவிலின் பொலிவு குறைந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.

(தொடரும்...)