எனக்கு பிடித்தது

என் கவிதைக்கு
எத்தனையோ
கருத்துக்கள்
விமர்சனங்கள்
மாற்றங்கள்
எல்லாம் ஏற்றுக்கொண்டு
மிகச் சிறந்ததாய்
மாற்றமும் பெறுகிறது
என் கவிதை...
ஆயினும்
எனக்கு பிடித்து
எனது பிழையான கவிதையே!...

விமர்சனம்

அடிப் பெண்ணே!
நாம் பேசி
பழகி
பரிமாறிய
வார்த்தைகளை விட
நம்மை
விமர்சித்த வார்த்தைகள்
அதிகமாகிவிட்டனவே!...

என்னில் நான் - வியர்டு

இப்பதாங்க பிளாக்ல எழுத ஆரம்பித்திருக்கேன். ஏதோ முன்னமே கவிதை அப்படினு எழுதி வச்சிருகிறதெல்லாம் போட்டு ஒப்பேத்தலாம் அப்படினு நெனச்சேன். ஆனா நம்ம ஊர்காரர் சிபி அண்ணன், பாசமா(?) நம்மல கூப்பிட்டுட்டார். சரி நம்மலும் எழுதலாம் அப்படினு முடிவு பண்ணிட்டு வியர்டுக்கு டிக்ஸ்னரில தேடினா unusual, strange அப்படினு இருந்தது. நானும் எனக்குள்ளே என்னைத்தேடி தேடிப்பார்த்தேன். அப்படி கண்டுபுடிச்ச சில...

ஆர்வக்கோளாறு:
எல்லோருக்குமே கிட்டத்தட்ட ஆர்வக்கோளாறு இருக்கும். இது சமயத்துல அதிகமாகி பின் தான் பிரச்சனை ஆயிடுது. பிரண்ட்ஸ் கூட பேசிக்கொண்டிருக்கும் போது அத செய்யலாம், இத செய்யலாம் அப்படினு முடிவு பண்ணிட்டு, கடைசி வரைக்கும் எதையுமே செய்வதில்லை. அதே மாதிரி எம்.சி.ஏ கூட போய் IGNOU-ல ஜாய்ன் பண்ணி 3 வருடம் ஆகிவிட்டது, ஆனா நம்ம டிகிரி மட்டும் இன்னும் முதல் செமஸ்டர்லேயே இருக்குது. இப்ப ஆபிஸ்லேயும் அத செய்யலாம், இத செய்யலாம்னு சொல்லி, அப்புறம் டைம் இல்ல ஹி.. ஹி..ஹி..-னு ஜகா வாங்க வேண்டியது.

படிப்பு:
நமக்கு படிப்பு ஆர்வம் கொஞ்சம் அதிகம்ங்க, இருங்க இருங்க நான் சொல்றது கதை படிக்கிறது. இது 10-வது முடிச்சு லீவு விடுவாங்கல்ல அப்ப ஆரம்பிச்சது இது. வீட்ல இருந்த ராணிமுத்து, மாலைமதி, கண்மணி அப்படினு ஆரம்பிச்சது. ஒரு நாள் தோட்டத்துல மாடு மேய்ச்ச போது கதைல இண்ரஸ்ட் ஆகி, மாட்ட கவனிக்கவேயில்ல, அது போய் அங்கிருந்த பயிரையெல்லாம் மேஞ்சு அதுக்கு டோஸ் வாங்கியது தனிக்கதை. இந்த ஆர்வம், இப்ப மன்னர்காலத்து வரலாறு பக்கம் போய்கிட்டு இருக்கு...

கோபம்:
என்னோட பெரிய பிரச்சனையே இந்த கோபம் தான். நான் நினைச்சது நடக்காம, கேட்டது கிடைக்காம இப்படி தொடங்கி, நெறைய இடங்கல்ல கோபம் வந்து நம்ம பேர ரிப்பேர் ஆக்கிடுது. நானும் கோபத்த குறைச்சிடனும் அப்படினு முயற்ச்சி செஞ்சு சில சமயங்கள்ல கண்ட்ரோல் பண்ணுவேன், ஆனாலும் இன்னும் அப்படியேதான் இருக்கு. ஆனா இத கண்டிப்பா கண்ரோல் பன்னனும்.(கோபம் வந்துட்டா அப்படியே அவன் மொகத்துல ஒரு குத்து விடனும் போல இருக்கு)

தனிமை:
ரசிக்கத் தெரிந்தவனுக்கு தனிமை ஒரு வரம். ஆமாங்க கூட்டத்துல கோயிந்தா போட்டு கும்மாளம் அடிப்பதை விட எனக்கு தனிமையில் இருப்பது தான் பிடிக்கும்.தனிமையில இருக்க பழகிட்டா எங்க வேணாலும் இருந்திடலாம் அப்படினு எங்கோ படித்த ஞாபகம். அப்பு தனியா அப்படி என்னத்தான் பண்ணுவீங்க அப்படினு கேக்கறீங்களா?. நாமதான் எப்பவுமே மூலைக்கு ஒன்னா போட்டு வச்சிருப்போமே அந்த புத்தகத்தையெல்லாம் அடுக்கி வைப்பேன், ரூமை சுத்தம் செய்வது, கவிதைனு எதையாவது கிறுக்காது, புத்தகம் எதாவது எடுத்து படிப்பதுனு எதாவது பண்ணிகொண்டு இருப்பேன். ஆனா டீ.வீ பார்க்க, தூங்க அப்படினு போய்ட மாட்டேன். எனக்கென்னவோ இது ரொம்ப பிடிச்சிருக்கு.

ஞாபகசக்தி:
எனக்கே நல்லா தெரியுது, நமக்கு ஞாபக சக்தி அதிகம்னு. ஆனா என்ன பண்ண, இது நல்ல விசயத்துல இல்லையே. முதல் நாள் பிரிப்பேர் பண்ணிய கேள்வியே இண்டர்வியூல கேட்டாகூட, பிரிப்பேர் பண்ணினோம் அப்படினுதான் ஞாபகம் இருக்கே தவிர அதற்கு பதில் என்ன அப்படினு ஞாபகம் வருவதில்லை. ஆனா 10-வதுல வாத்தியார் அடிச்சது இன்னும் அப்படியே ஞாபகம் இருக்கு. நமக்கு யாராவது கெடுதல் பண்ணினாகூட பாரவாயில்ல, நாம கேட்டது ஒரு முறை செய்யலைனாவே மறுமுறை அவங்கள எங்க பாத்தாலும், அவங்க மறுத்துதான் தான் ஞாபகத்துக்கு முதல்ல வருது... எப்படி நம்ம ஞாபக சக்தி.

அண்ணன் சிபி, வியர்டு எழுதுனு ஆசையா கூப்பிட்டாரு, சரி எழுதலாம்னா என்ன எழுதறதுனே தெரியல. சரி அப்படினு சில பிளாக்ல பாத்தேன், அப்புறம் "வியர்டு"க்கு என்ன அர்த்தம்னு டிக்ஸ்னரில பாத்துட்டு, என்ன எழுதறதுனு தெரியல. எப்படியோ கடைசில எழுதியும் போட்டுட்டேன். என் வேலை முடிஞ்சது. இனி படிச்சு கமெண்ட் கொடுக்கறது உங்க வேலைதான்.

நானும் 2 பேரை கூப்பிடுறேன்.
1. சிந்தனைக்கு... வந்தவை - பாலா
2. வித்தியாசமானவன் - கமல்

எழுத நினைத்தது

ஏனோ மனதில் குழப்பம்.
எழுத வேண்டும் என நினைத்தேன்.
என்ன எழுதுவது
எப்படி எழுதுவது
எதுவும் தெரியவில்லை.
எழுதினேன்..
எழுதியும் முடித்துவிட்டேன்.
கடைசிவரை
எழுத முடியவில்லை
நான் "எழுத நினைத்ததை"....

கவிதை

உன்னைப் பற்றி
ஏதேதோ நினைவு என்னுள்...
எங்கெங்கோ தேடி
ஏதேதோ வார்த்தைகளைக் கோர்த்து
கவிதை ஒன்று எழுதினேன்.
எழுதி முடித்ததும்
மீண்டும்
மனதில் அதே சுமை...
பின் தான் நினைத்தேன்
கவிதைக்கே
கவிதை எழுத முடியுமா என்று?...

நாம் நண்பர்களே!

உன்னை
சந்திக்க வரும்
ஒவ்வொரு முறையும்
எனக்கு குழப்பமே.
நம்
உறவுக்குப் பெயர்
நட்பா? காதலா? என்று...
நீ
இல்லாத தருணத்தில்
உன் பெற்றோரின்
விசாரிப்புகளும்
தங்கையின்
புன் சிரிப்பும்
தம்பியின்
உரையாடலும்
உறுதிப்படுத்துகின்றன
நாம்
நண்பர்கள் என்று...