100-வது நாள் கொண்டாட்டம்

நண்பர்களுக்கு வணக்கம்,

எல்லாரும் பிளாக் எழுதுறாங்க அப்படினு நானும் ஒரு வேகத்துல பிளாக் ஆரம்பிச்சு, வணக்கம்னு ஒரு பதிவும், ஒரு கவிதை பதிவும் போட்டாச்சு. அப்புறம் யோசிச்சா என்ன எழுதறதுனு ஒன்னுமே புரியல. சரி நம்ம அண்ணாத்த்கிட்டயே ஐடியா கேட்டுறுவோம்னு சிபி அண்ணாத்தைக்கு போன் போட்டேன்.


அண்ணன் தான் ஐடியா குடுத்த்தாரு. இப்படிதான் ஒன்னுமே புரியாது, அதையும் ஒரு மொக்க பதிவா போட்டிரு, அவ்வளவுதான். இப்படிதான் பிளாக் எழுதனும்னு, ரொம்ப உறுதுணையா நின்னு, முன்னேற உதவி செஞ்சிருக்காரு. அப்படி பட்ட நம்ம அண்ணனுக்கு இந்த 100-வது நாளில் நன்றி சொல்ல நானும், என் பிளாக்கும் கடமைப்பட்டுள்ளோம்.


அப்புறம் நான் எழுதுனதையும் மதிச்சு, படிச்சு கமெண்ட் போட்ட உங்களுக்கு பெரிய டாங்ஸ். உங்களோட இந்த சப்போர்ட் இருந்தா பின்னாளில் ஒரு வைரமுத்து மாதிரியோ, வாலி மாதிரியோ இல்லாம ஒரு புதுமாதிரியான கவிஞனை எதிர்பார்க்கலாம்.


100 நாள் ஆயாச்சு. ஏதாவது பண்ணனுமே அப்படினு பயங்கரமா யோசிக்க ஆரம்பிச்சேன். இப்போதைக்கு அதிகம் பேசப்படறது கவிதை, அதுவும் "கொலைவெறிக் கவிதை"னு ஒரு புது வடிவம் வந்திருக்கு. அதில் ஏதாவது பண்ணலாமேனு முடிவெடுத்தேன். அப்பதான் ஒரு ஐடியா வந்தது. கொலைவெறி கவிதை எழுத ஒரு கருவி பண்ணினா என்ன?. அதன் பயனாக ஏதோ என்னால் ஆன ஒரு கருவியை இப்போதைக்கு உருவாக்கியுள்ளேன். அது கொடுத்த

சாம்பிள் கவிதை:

எரிச்சலுற்று
உமக்கேது சில்லுகள்
தொடங்குகின்றன வார்
கெக்கெபிக்கே நானும் பாப்பாக்கள்
புகை நெருங்குகின்றனர்
தெக்கியாரைக் வண்டி பார்க்கிறேன்
கடிக்கட்டும் செருப்பு
கொலைவெறி

மூட்டிவிட்டு
தொலைவில் என் கவனத்தைச்
நிழல்களை
வலித்து புகை
கால்வைத்தும்
காமமுமாய் செய்து
மிதித்துப்போட செல்கிறது
சிதறடிக்க வாசல்
எதிர்ப்படுக்கை
வெப்பம் வெப்பம் உரசியபடிச்
தெக்கியாரைக் என்று
பீடியை
கொலைவெறி வாசலுக்கு
பூனனயின் காலாற
பொருக்கியபடியே

என்னை
கால சூழ்ந்து ஒன்றிலிருந்து
சன்னல் எச்சமாய்
உரசல்
வெப்பம் மூட்டிவிட்டு
என்னை
சுழலத் அழைக்கிறேன்
கண்களுக்குள் கொலைவெறி
உரசியபடிச் கத்தியுடன்
மனிதம் எங்கிருக்கிறது
கருப்புப் விளிம்புகளில் பயணம்
எல்லாம் கும்மியை நோக்கியே
!

அந்த அழகிய நினைவுகள்

எங்கே மறப்பது
உன்னையும்
உன் நினைவுகளையும்...

ஞாபக முடிச்சுகள்
அவிழ்க்கப்படாமல்
இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன...

பச்சரிசி பல்வரிசையில்
பளீர் புன்னகை தானே
முதலில் வரவேற்கும்...

சிக்கல் இல்லாத
உன் நீண்ட கூந்தலில்
சிக்கிகொண்டது நானல்லவா?...

அன்று ஒரு நாள்
நீ கொடுத்த
காபியின் சுவை - என்
நுனி நாக்கில் இன்னும்...

கோவிலில்
நீ என்ன வேண்டிணாயோ?
சாமியை நோக்கி நீ நிற்க
உன்னை நோக்கி நான்...

இப்படியாய்
காதல் என்று சொல்லமுடியாத
அந்த அழகிய நினைவுகள்
வந்து கொண்டேயிருக்கின்றன
என்னுள்....

துளித்துளியாய்...

பார்க்காதே!
அவ்வாறு
என்னைப் பார்க்காதே!
நீயோ
உன் பார்வையால்
முழுவதுமாய் என்னை
அள்ளிச் செல்ல
நானோ
சிதறுண்டு போகிறேன்
துளித்துளியாய்....

தெருவோரப் பூக்கள்

யாருக்காக
எதற்காக
ஏன் பூத்திருக்கின்றன
இந்த பூக்கள்...

எங்கோ விழுந்து
ஏனோ முளைத்து
எப்படியோ வளர்ந்து
பூத்து நிற்கின்றன...

எத்தனையோ
பாதங்கள் கடந்திருக்கும்
கண்கள் பார்த்திருக்கும்
இந்த செடியை...

பார்க்காத கண்களும்
கடந்து போன பாதங்களும்
அவகாசம் கேட்கின்றன.
இந்த மலரை பார்க்கவோ?...
பறிக்கவோ?...

என்ன இது?...

உன்னை
என்னவென்று சொல்வது?...
நான் அழும்போது
என்னோடு அழுதவள்...
சிரித்தபோது
சேர்ந்து சிரித்த்வள் நீ.
எனக்காக இல்லாவிட்டாலும்
என்னோடு இருந்தவள்.
இன்றோ
எங்கிருக்கிறாயோ?
எப்படி இருக்கிறாயோ?
எல்லாம் முடிந்துவிட்டது.
இருந்தாலும்
மனம் மட்டும்
சொல்லிக்கொண்டிருக்கிறது
நாம்
சந்தித்திருக்க வேண்டாம் என்று...

யார் தான் கேட்பது?...

இப்போது அரசு சட்டம் கொண்டுள்ளது, கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென்று...

அச்சட்டத்தின் படி,

வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமாம்.

பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமாம்.

கார்களில் சீட் பெல்ட் அணிய வேண்டுமாம். சீட் பெல்ட் இல்லாத கார்களில் பொருத்த வேண்டுமாம்.

ஆட்டோ ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணிவது பற்றி பரிசீலித்து வருகிறோம்.

இதெல்லாம் சரிதான்.

சீக்கியர்கள் தங்கள் மத வழக்கப்படி தலையில் டர்பன் அணிந்திருப்பார்கள். அதனால் அவர்களுக்கு விலக்கு அளிக்கலாமா என்று அரசிடம் விளக்கம் கேட்கிறார்கள்.

அதுவும் சரிதான்.

ஆனால் 40+25=65+2 என்று போட்டுள்ள பேருந்தில் 100க்கு அதிகமான பேர் பயணிக்கலாமா?

அப்போது அவர்களுடைய பாதுகாப்பு என்னாவது?

இதை மட்டும் ஏன் யாரும் கண்டுகொள்வதில்லை...