100-வது நாள் கொண்டாட்டம்
நண்பர்களுக்கு வணக்கம்,
எல்லாரும் பிளாக் எழுதுறாங்க அப்படினு நானும் ஒரு வேகத்துல பிளாக் ஆரம்பிச்சு, வணக்கம்னு ஒரு பதிவும், ஒரு கவிதை பதிவும் போட்டாச்சு. அப்புறம் யோசிச்சா என்ன எழுதறதுனு ஒன்னுமே புரியல. சரி நம்ம அண்ணாத்த்கிட்டயே ஐடியா கேட்டுறுவோம்னு சிபி அண்ணாத்தைக்கு போன் போட்டேன்.
அண்ணன் தான் ஐடியா குடுத்த்தாரு. இப்படிதான் ஒன்னுமே புரியாது, அதையும் ஒரு மொக்க பதிவா போட்டிரு, அவ்வளவுதான். இப்படிதான் பிளாக் எழுதனும்னு, ரொம்ப உறுதுணையா நின்னு, முன்னேற உதவி செஞ்சிருக்காரு. அப்படி பட்ட நம்ம அண்ணனுக்கு இந்த 100-வது நாளில் நன்றி சொல்ல நானும், என் பிளாக்கும் கடமைப்பட்டுள்ளோம்.
அப்புறம் நான் எழுதுனதையும் மதிச்சு, படிச்சு கமெண்ட் போட்ட உங்களுக்கு பெரிய டாங்ஸ். உங்களோட இந்த சப்போர்ட் இருந்தா பின்னாளில் ஒரு வைரமுத்து மாதிரியோ, வாலி மாதிரியோ இல்லாம ஒரு புதுமாதிரியான கவிஞனை எதிர்பார்க்கலாம்.
100 நாள் ஆயாச்சு. ஏதாவது பண்ணனுமே அப்படினு பயங்கரமா யோசிக்க ஆரம்பிச்சேன். இப்போதைக்கு அதிகம் பேசப்படறது கவிதை, அதுவும் "கொலைவெறிக் கவிதை"னு ஒரு புது வடிவம் வந்திருக்கு. அதில் ஏதாவது பண்ணலாமேனு முடிவெடுத்தேன். அப்பதான் ஒரு ஐடியா வந்தது. கொலைவெறி கவிதை எழுத ஒரு கருவி பண்ணினா என்ன?. அதன் பயனாக ஏதோ என்னால் ஆன ஒரு கருவியை இப்போதைக்கு உருவாக்கியுள்ளேன். அது கொடுத்த
சாம்பிள் கவிதை:
எரிச்சலுற்று
உமக்கேது சில்லுகள்
தொடங்குகின்றன வார்
கெக்கெபிக்கே நானும் பாப்பாக்கள்
புகை நெருங்குகின்றனர்
தெக்கியாரைக் வண்டி பார்க்கிறேன்
கடிக்கட்டும் செருப்பு
கொலைவெறி
மூட்டிவிட்டு
தொலைவில் என் கவனத்தைச்
நிழல்களை
வலித்து புகை
கால்வைத்தும்
காமமுமாய் செய்து
மிதித்துப்போட செல்கிறது
சிதறடிக்க வாசல்
எதிர்ப்படுக்கை
வெப்பம் வெப்பம் உரசியபடிச்
தெக்கியாரைக் என்று
பீடியை
கொலைவெறி வாசலுக்கு
பூனனயின் காலாற
பொருக்கியபடியே
என்னை
கால சூழ்ந்து ஒன்றிலிருந்து
சன்னல் எச்சமாய்
உரசல்
வெப்பம் மூட்டிவிட்டு
என்னை
சுழலத் அழைக்கிறேன்
கண்களுக்குள் கொலைவெறி
உரசியபடிச் கத்தியுடன்
மனிதம் எங்கிருக்கிறது
கருப்புப் விளிம்புகளில் பயணம்
எல்லாம் கும்மியை நோக்கியே!