மாறாத ஒரு புன்னகை

தவிப்போ
எவ்வித சோகமோ இல்லாமல்
இனிமையாகவே அமைந்துவிடும்
தொடக்கங்களாக
எதிர்பார்க்கிறேன்
பிரிவிலும் ஒரு புன்னகை...

உறுதியான முடிவுகளும்
பொருளுணர்ந்த பிரிவுகளும்
சூழ்நிலையில்
துயரமாகவே அமைய
கை கோர்த்து நடந்த தருணங்களையும்
பேசிச் சிரித்த பொழுதுகளையும்
நினைத்து சிரிக்க முற்படுகையில்
உனை
பார்வையிலிருந்து
மறைக்கிறது கண்ணீர்...

எல்லாம் மறைத்து
கை கொடுத்து
வழி அனுப்பும் வேளையில்
எதையோ உணர்த்த
கையில் பட்டு தெறிக்கிறது
கண்ணீர்...

நினைப்பது போல்
அமைவதில்லை வாழ்க்கை
கவிதையும் கூட...

குண்டாவது எப்படி???....


குண்டாவது எப்படி???....

நான் 10-ம் வகுப்பு படிக்கும் போது நல்லா குண்டா இருந்தேன். அதற்கப்புறம் கொஞ்சம் இளைத்து சரியான அளவு இருந்தேன்.

அப்படியே கல்லூரி நாட்களிலும் தொடர்ந்ததால் எந்த கவலையும் இல்லை. ஆனா என்னிக்கு சென்னை வந்து ஓட்டலில் சாப்பிட ஆரம்பிச்சேனோ அப்ப இருந்து கொஞ்சம் கொஞ்சமா மெலிய ஆரம்பிச்சுடுச்சு உடம்பு. எனக்கு அப்படியே இருப்பது போல தான் தெரியுது.

ஆனா ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போது, ஏண்டா இப்படி ஆயிட்ட என்று கேட்கிறார்கள். இப்படி எல்லாரும் ஊருக்கு போகும்போதும் கேக்கிறதால டென்சன் தான் ஆகுது. இப்படிதான் நேத்து ஊருக்கு போயிருந்த போதும் இப்படி பிரச்சனை ஆரம்பிக்க நான் அடுத்த முறை ஊருக்கு(2 மாதம் கழித்துதான் போவேன்) வரும்போது குண்டாதான் வருவேன் அப்படினு சவால்(?!) விட்டுட்டு வந்துட்டேன்.

ஆனா என்ன பண்றதுனு ஒன்னும் புரியல. ஊரில் இருந்து வந்ததிலிருந்து ஆபிஸ்ல எல்லோரிடமும் கேட்டால் ஆளுக்கு ஒரு ஐடியா கொடுக்குறாங்க. கடைசில ஒருத்தன் வந்து ஏண்டா, பிளாக்ல மேட்டரே இல்லாம பதிவு போடுறீங்களே, அதுக்கு பதிலா இது போல உருப்படியான(?!) பதிவு ஏன் போடகூடாது கேட்டான்.

அப்புறம் தான் நம்ம பதிவுலகில பல ஜாம்பவான்கள் முதல் ஒல்லிபிச்சாண்டிகள் வரை எல்லா வகையிலும் இருக்கிறார்களே கேட்டால் ஐடியா கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதை கேட்கிறேன்.


"குண்டாவது எப்படி???"

நான் கேள்விபட்ட சில வழிகள்:-

1. தினமும் மூன்று வேளையும் நல்லா சாப்பிடனும். சாப்பிட்ட உடனே தூங்கிடனும். இப்படி தினமும் செஞ்சா ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்குமாம்.

2. கவலைகளை மறந்து இருக்கனுமாம். கவலை இருந்தாவே உடல் நலமாக இருக்காதாம்.

3. "குடிமகன்" ஒருத்தர் கொடுத்த ஐடியா, வாரம் ஒரு பீர் சாப்பிட நல்லா குண்டாயிடலாம் என்றார். அதற்கு அடிமையாயிட்டா என்ன பண்ணனு கேட்டதுக்கு, அதுக்கு தனியா ட்ரீட்மெண்ட் பண்ணிக்கலாம்கிறார்.

4. பாலும் தேனும் கலந்து குடிச்சா நல்ல பலன் இருக்கும்னு சொல்றாங்க.

டிஸ்கி: மக்கா, இதுல குண்டாவதற்கும் ஐடியா கொடுங்க, அப்படியே குண்டாயிட்டா ஒல்லியாவதற்கும் ஐடியா கொடுங்க....

ஏன்னா, நீங்க கொடுக்குற ஐடியாவுல ஓவரா குண்டாயிட்டா, ஒல்லி ஆவுரது எப்படினு தெரியனுமில்ல அதுக்கு தான் இந்த முன்னெச்சரிக்கை....

உன் நினைவு...


ஆம்!
கொஞ்ச நாட்களாய் தான்
எந்த சூழ்நிலையில்
எப்படி இருந்தாலும்
'அந்த' பாடலை கேட்கும் போது
நீ தான்
நீ மட்டும் தான்
மனதில் தோன்றி
மறையாமல் நிற்கிறாய்...

விழுங்க முடியாத வேதனையில்
தவிக்கிறேன்
துடிக்கிறேன்.

தொலைவில் இருந்து கொண்டு
தொல்லைதான் தருகிறாய்
நினைவில்...

இம்சையாய் இருக்கின்ற போதும்
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்...

பாடல் முழுவதையும்
கேட்க வேண்டுமென
ஆசைதான்.
ஆனால்
முதல் வரியின் தொடக்கத்திலேயே
உன்னில் மூழ்கி
பாடலை மறக்கிறேன்.
மீண்டும் கேட்க எத்தனிக்கையில்
மீண்டும்
அதே தொடக்கம்
அதே உன் நினைவு....