மரம் நடலாம் வாங்க...

சென்னையை பசுமையான நகரமாக்க சென்னை சமூக சேவை தொண்டுநிறுவனம் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கிவருகிறது.

98940 62532 - இந்த எண்ணுக்கு ஒரு செய்தி அனுப்பினால் போதும், அவர்கள் உங்களை தொடர்பு கொண்டு என்ன வகையான மரக்கன்று வேண்டுமோ அதை வீட்டிலேயே கொண்டுவந்து தருகிறார்கள்.

1. யாணை குண்டுமணி
2. மே பூ
3. ஏழிலைப்பணை
4. புன்னை
5. கொய்யா
6. பாதாம்
7. பூவரசம்
8. இலுப்பை
9. மகிழம்
10.குங்குமம்

உங்களிடம் மரக்கன்று நட இடம் உள்ளதா?

உடனே SMS செய்யுங்கள் - 98940 62532.




மரம் நடுவோம் மழை பெறுவோம்

மழையோடு விளையாடி...

நனைந்து முளைப்பதோ
ஊறி உடைவதோ
நடவாத போதிலும்
கொளுத்தும் வெயிலில்
மழை பெய்தாலும்
நனையவும் வேண்டும் ஒரு மனம்...

'மழை வருது உள்ள போ'
அம்மாவின் குரலுக்கு பின்
வெளியே ஓடி
மண் வாசனையுடன்
முதல் துளியில் நனைந்து...

நின்ற மழையின்
வரும் வெள்ளத்தில் விளையாடி
சேரும் சகதியுமாய் திரும்பி
அம்மாவிடம் அடிவாங்கினாலும்
மழையை வெறுத்திட
நினைக்காத மனம்.


முடியாத தருணங்களிலும்
விழும் மழையை ரசித்து
மகிழ்ச்சி கொண்ட மனம்

கொளுத்தும் வெயிலில்
மழைக்காக வருத்தப்பட்டாலும்
எப்போதாவது பெய்யும் மழையிலும்
நனைந்திட துணிந்ததில்லை மனம்.

பேருந்து நிழற்குடையோ
உயர்ந்து நிற்கும் கட்டிடமோ
அலுவலக கண்ணாடி ஜன்னலோ
எங்கேனும் ஒளிந்து கொள்ளவே ஓடுகிறேன்.
நனைந்து முளைப்பதோ
ஊறி உடைவதோ
நடவாத போதிலும்
நனைய நினைப்பதில்லை மனம்.

ஜோதிடமும் - தீபாவளியும்

நாம இண்டர்நெட், ஈ-மெயில் அப்படினு எவ்ளோ வேகமா முன்னேறி போயிட்டு இருந்தாலும்
சில விசயங்களில் நம்ம நம்பிக்கைய மாத்திக்க முடியாது. அப்படிதான் ஜோதிடமும். ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து படிப்பு, தொழில், திருமணம், குழந்தைகள் அப்படினு ஒவ்வொரு கட்டத்திலையும் ஜோதிடம் பார்ப்போம்.

இந்த ஜோதிடம் தனி மனிதர்கள் தவிர்த்து தொழில் தொடங்குவது, வேலைவாய்ப்பு மட்டுமில்லாம ஒரு நாட்டுக்கே கூட ஜோதிடம் உண்டு.

ஒரு சிலர் இத மூடநம்பிக்கை அப்படினு சொன்னாலும் இதை பலர் நம்பிக்கையாதான் நினைக்கிறாங்க. சில சமயங்கள்ல வியாபாரிங்க தங்கள் தொழிலுக்கு இதையே சாதகமா பயன்படுத்தி சில விசயங்கல திரிச்சி விடுறதும் உண்டு.

கொஞ்ச நாளைக்கு(சில வருடம்) முன்பு பச்சை கலர் புடவைல ஒரு புரட்சி நடந்தது எல்லோருக்கும் தெரிந்ததே. அதாவது அண்ணன்/தம்பி எல்லோரும் தன் உடன் பிறந்த அக்கா/தங்கை களுக்கு பச்சை கலர் புடவை எடுத்து கொடுக்கனும். இல்லைனா தோஷம், அவங்க(அண்ணன்/தம்பி) உயிர்க்கு ஆபத்துனு கெளப்பி விட்டுட்டாங்க. நாடே பச்ச பச்சனு அல்லோலப்பட்டு போங்க. என் உயிர்தான் போன போயிட்டு போகுதுனு சொன்னாகூட விடமாட்டோம்னு வாங்கிட்டு தன் பாசத்த காட்டின அக்கா தங்கைகள் உண்டு.

அடுத்து இந்த அட்சய திதில தங்கம் வாங்கினா தங்கம் பெருகுமாம். இது யார் கிளப்பி விட்டதுனு தெரியல. இந்த அட்சய திதி அன்னிக்கு கணவனோட பாடு எல்லாம் திண்டாட்டம் தான். சோத்துக்கே காசு இல்லைனாலும் அன்னிக்கு தங்கம் வாங்கியே ஆகனும்னு நிப்பாங்க. வாங்கி கொடுக்கலைனா அப்புறம் சோத்துக்கு திண்டாட்டம் தான் அதனால அவனும் எங்காவதும் கடன வாங்கியாவதும் கடைக்கு கூட்டிட்டு போவான். இங்க காசு கொஞ்சம் தான் இருக்குனு எதாவது சின்னதா வாங்கிகிட்டு கடைய ஒரு ரவுண்டு விட்டு என்னென்ன இருக்குனு பாத்துட்டு வந்துட வேண்டியது. ஒரு மாதத்துக்கு அப்புறம் நான் அன்னிக்கு போனப்போ ஒரு டிசைன் பாத்தேன் அது நல்லா இருந்துச்சி வாங்கிகொடுங்க வாங்கிகொடுங்கனு உசுர எடுக்க வேண்டியது. அவனும் பாவம் எத்தன நாளைக்கு தான் சமாளிக்கிறது. காலைல ஆபிஸ் கெளம்பும் போது ஒரு தடவ சொல்ல வேண்டியது. அப்புறம் மதியம் போன் பண்ணி சொல்ல வேண்டியது. நைட் ஆபிஸ்ல இருந்து வந்ததும் சொல்ல வேண்டியது. பொறுத்து பொறுத்து பார்த்துட்டு முடியலடா இவ தொல்லை அப்படினு எப்படியாவது அத வாங்கி கொடுப்பான். அதுக்கப்புறம் சொல்வாங்க பாருங்க ஒரு டயலாக். அதாங்க "அட்சய திதி அன்னிக்கு தங்கம் வாங்கினா தங்க சேரும்னு" இப்போ பாத்திங்களா மறுபடி தங்கம் வாங்கிட்டோம். அவன நச்சரிச்சு புடுங்கிட்டு வாங்கிட்டோம்னு பேசிட்டு இருப்பாங்க.

அதுல புதுசா இப்போ தீபவளிக்கு ஜோதுடம் பாத்து என்ன கலர் துணி வாங்கலாம்னு சொல்லிருக்காங்க. கீழ இருக்கிற படத்தை கிளிக் பண்ணி படிச்சு பார்த்து பலனை அனுபவிச்சுக்குங்க மக்காஸ்...

இதுக்கு பேர்தான் சாலை மறியலா???

சாலை மறியல்னா ஏதாவது ஒரு கோரிக்கை வைத்து தான் செய்கிறார்கள். ஆனால் இப்போ இத சிலர் ஃபேஷனா பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நேத்து தி.நகர் போலாம்னு போனப்போ மேற்கு மாம்பலம் கிட்ட வரிசையா பேருந்து, வண்டி எல்லாம் நிப்பாட்டிட்டாங்க.

என்னமோ கும்பலா இருக்காங்களே என்னனு தெரியலையேனு யோசிச்சிட்டு இருக்கும் போது ஒருத்தர் "ஏதோ சாலை மறியலாம்" அப்படினார். எப்படிங்க சொல்றீங்க அப்படினேன். ஆக்ஸிடெண்டா இருந்தா இந்நேரம் ஆம்புலன்ஸ் வந்திருக்கும்ல.. என்று என்னை ஒரு லுக் விட்டார். சரி நமக்கு ஏன் வம்புனு, நானும் கருமமே கண்ணா வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.

கூட்டத்த பாத்தது ஆஹா பெரிய மறியல் போல நாம இன்னிக்கு தி.நகர் போனமாதிரிதான்னு நினைச்சேன். அப்போதான் ஒரு போலிஸ்காரார் வேகமா வந்தார். கூட்டத்துக்குள்ள போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வெளில வந்து போன் போட்டு பேசினார் (இங்கன நிறைய பேர் இருக்காங்க வாங்கடா நல்லா கும்மிட்டு போலாம்னு சொல்லிருப்பார் போல).

கொஞ்ச நேரத்துல 4/5 போலிஸ் கைல லத்தியோட வந்தாங்க. அவங்கள திரும்பி பாத்துட்டு திரும்பினா இங்க மறியல் பண்றோம்னு சொன்னதுல ஒரு 10 பேர் தான் இருக்கானுவ. மீதி எவனையும் காணோம். என்னடானு கேட்டா இவங்க மட்டும் தான் சாலை மறியல் பண்றவங்களாம். மீதி எல்லாம் வேடிக்கை பாக்க வந்தாங்களாம்.

வந்த போலிஸ்காரங்க அங்க போய் மக்கள்கிட்ட பேச்சு வார்த்தை நடத்தி (தமிழ் சினிமால அப்படிதான செய்யுராங்க) அவங்கள கலைஞ்சு போக சொல்வாங்கனு நினைச்சேன். ஆனா போனவங்க, ஆளுக்கு 2 பேரை தள்ளி பிடிச்சுகிட்டாங்க. இன்னொருத்தர் போக்குவரத்தை சீர்படுத்தி விட்டுட்டார்.

இவ்ளோதான் அவங்க சாலை மறியல்.

அவங்க கோரிக்கை என்ன? அதை நிறைவேற்றலைனா கூட பரவால. குறைந்த பட்சம் யாராவது கேட்டாங்களா என்னானே தெரியல???. :(

ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள் - புதிய கவிதை நூல்


கனவுகளை சுமந்து கொண்டு ஒரு கவிதை நூல்...

ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள் - நிலாரசிகனின் மூன்றாவது படைப்பு.

சென்னையில் ஜனவரி மாதம் நடந்த புத்தகத்திருவிழாவின் போது தான் தனது இரண்டாவது படைப்பான "மயிலிறகாய் ஒரு காதல்" புத்தகத்தை வெளியிட்டார்.

குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு கவிதை தொகுப்பு.

விஸ்டம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள்

சென்னையில் இப்புத்தகம் கிடைக்குமிடங்கள்:

New Book Lands
#52C Basement
North Usman Road
T. Nagar
Chennai - 600017
Landmark: Opp ARR Complex,Near Panagal Park
Phone: 044-28158171, 28156006

2.Hikkin Bothams

3.AnyIndian Book shop,T.ண்agar

4.New Century book shop

5.Wisdom Educational Service
10/8, Dr.Nammalvar Street,
Triplicane,
Chennai-600005
Phone:044-28447476
Mobile:9382181319,9841162927
Email:wisdomedu2003@yahoo.co.in

தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிக்கிங் பாதம்ஸ் மற்றும் நியூ சென்சுரி புக் ஹவுஸிலும் கிடைக்கும்.

மற்ற படைப்புகள்:

நிலாக்காலங்கள்
மயிலிறகாய் ஒரு காதல்

தேர்வு முடிவுகள்...

மார்ச் மாதம் முடிந்த +2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. எப்போதும் போல் இல்லாமல் முதல் மதிப்பெண் (1182) -ஐ ஒரு மாணவனும் மாணவியும் பெற்றுள்ளனர். இரண்டாம் மதிப்பெண் (1181)-ஐயும் மாணவனும் மாணவியும் பெற்றுள்ளனர். மூன்றாவது மதிப்பெண் 1180-ஐ ஒரு மாணவி பெற்றுள்ளார்.

முதல் மூன்று இடங்களையும் நாமக்கல் மாவட்ட மாணவர்கள் பெற்றுள்ளது கூடுதல் மகிழ்சி.

முதல் மதிப்பெண் பெற்றவர்கள் (1182)

R.தாரணி,
வித்யாவிகாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு, நாமக்கல்.

M.ராஜேஸ்குமார்
புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.

இரண்டாவது மதிப்பெண் பெற்றவர்கள் (1181)

குமார் விக்ரம்
வித்யாவிகாஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு, நாமக்கல்.

ரம்யா
K.K.N பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு.

மூன்றாவது மதிப்பெண் பெற்றவர்கள் (1180)

K.தீபா
S.R.V பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இராசிபுரம், நாமக்கல்.


தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

கொலைவெறியுடன் ஒரு காலை - குருவி

எப்போதும் போல் சனி இரவு தூங்குவதற்குள் ஞாயிறு காலை ஆகிவிட்டது. 3 மணிக்குதான் உறங்கினேன். 6.30 க்கு நண்பன் எழுந்திருடா என எழுப்பினான். ஏண்டானு கேட்டா, கெளம்பு கெளம்பு படத்துக்கு நேரமாச்சு, சீக்கிரம் கிளம்புடானு மிரட்டல் வேற. என்ன படம்னு சந்தடி சாக்கில் கேக்க "குருவி"-னு சொன்னான். ஆனது ஆயிடுச்சு போய் தான் பாப்போமே (ஓசி டிக்கெட் தான) அப்படினு கிளம்பியாச்சு.

காலைல 7.30 ஷோக்கு அதிகம் வரமாட்டாங்க அப்படினு நினைச்சுட்டு போனா அவனவன் புள்ள குட்டியோட குடும்பமா வந்து ஒக்காந்திருக்காங்க. நீங்க வந்தீங்க சரி அந்த குழந்தைங்க என்னடா பாவம் பன்னுச்சு இப்படி காலைல 7.30 இழுத்துட்டு வந்திருக்கீங்கனு நினைச்சுகிட்டேன். அதுக்குள் நண்பன் வேறு வாடா உள்ள போலாம், படம் ஆரம்பிச்சுடும்னு இழுத்துட்டு போனான்.

இருக்கைய தேடிபுடிச்சு உட்கார்ந்து திரைய பார்த்தா, விஜய் பயங்கரமா கார் ஓட்டிட்டு இருக்கார். என்னடா இப்படி கும்பலா போறாங்களேனு நினைச்சேன், அப்புறம் தான் தெரிஞ்சது அது ரேஸாமாம். கண்ணுக்கு குளிர்ச்சியா மாளவிகாவ காட்டினாங்க, அதுக்கப்புறம் அது வரவேயில்லை, ஏன்னு தெரியல. நல்லா இருந்தா மறுபடி படத்துல இருக்க மாட்டாங்க போல. :)



ரேஸ பத்தி சொல்லாம விட்டுட்டேனே, விஜய் கார் ஓட்டுராரு, அதுவும் புது கார் இல்ல, ரேஸ் காரும் இல்ல, நம்ம ஊரு காய்லாங்கடைல நிக்குமே அந்த ஓட்ட வண்டி. அவரு போற வேகத்துக்கு ஒவ்வொரு பார்ட்டா கழண்டு விழுது. ஒரு கட்டத்துல ஆக்ஸிலரேட்டர் பெடலே கழண்டு கீழ விழுந்துடுச்சு. அப்பாடி முடிஞ்சது கத அப்படினு நினைச்சா அங்கதான் டிவிஸ்ட் வைக்குறாரு நாம்ம இயக்குனர். கார் நிக்கிற கண்டிசனுக்கு போயிடுச்சு, அப்போதான் அது நடந்துச்சு. நம்ம விஜய் இருக்காரே விஜய் (என்னடா பண்ணினார்னு கேக்குறது புரியுது. இருங்க அவசரபடாதீங்க, சொல்றேன்) குனிஞ்சு ஆக்ஸிலரேட்டர் வயர எடுக்குறாரு. காருக்கு எந்த ஊர்லடா ஆக்ஸிலரேட்டர் வயர் இருக்குனு நீங்க என்னைய கேக்ககூடாது ஆமா.

அந்த வயர வாய்ல கடிச்சு இழுத்த இழுப்புல கார் கன்னாபின்னானு போகுது. கடைசில பாத்தா கார் ஒரு ஜம்ப் பண்ணி வந்து நிக்குது, கேட்டா மொதல்ல வந்துடுச்சாமாம். :P. அவ்ளோதான் மாளவிகா ஒரு ஜம்ப் பண்ணி வந்துச்சு, அதோட பாய்பிரண்ட தட்டிவிட்டுட்டு வந்து கிஸ் பண்ணுச்சு, அப்புறம் ஒடனே ஒரு பாட்டுக்கு ஆடுச்சு. அம்புட்டு தேன் அதுக்கப்புறம் அத காணல...



அதுக்கப்புறம் படம் என்னனு எல்லாம் கேக்கப்பிடாது. விஜய் குடும்பத்தை காட்டுனாங்க, அப்புறம் ஒடனே கெளம்பி மலேசியா போனாரு (மலேசியா போறத்துக்கு இந்த பாஸ்போர்ட், விசா அப்படினு சொல்லுவாங்களே அதெல்லாம் வேணுமுங்களா). அங்கன வில்லன் கூட ஒரு சண்டை. அப்படியே வில்லன் வீட்டுக்கு போறாரு. அங்க திரிசாவ பாக்குராரு. திரிசா வேற யாரு,(என்னங்க இது கூட தெரியாம இருக்கீங்க) நம்ம வில்லன் தங்கச்சி தான். அவங்களுக்கு விஜய பாத்ததும் காதல் பத்திக்குது. அப்புறம் இந்தியா திரும்பி வராங்க. என்னங்க இது சின்னபுள்ளதனமா கேள்வி கேட்டுகிட்டு, திரிசாவும் கூடத்தான் வர்ராங்க.

முதல் பாதில விஜய் கூடவே ஒட்டிட்டு இருந்த விவேக் இரண்டாவது பாதில காணலை. யாரது படத்துல காமெடி இல்லையானு. ராஸ்கல் பிச்சி புடுவேன் பிச்சி. அப்புறம் ரெண்டாவது பாதில வில்லன் வர்ராரு சண்டை போடுறாங்க. வழக்கம் போல விஜய் ஜெயிக்குறாரு. திரிசாவ கை புடிக்குறாரு. அவங்க அப்பா, ஊர் மக்களை காப்பாத்துராரு. அம்புட்டு தான்.

இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது. இன்னமும் நீங்க தெரிஞ்சுக்கனும்னு ஆசபட்டீங்கனா நீங்களே போய் பாத்து தெரிஞ்சுக்குங்க/சந்தோசப்படுங்க(?!). :)))

பி.கு:
1. எனக்கு பின்னாடி இருந்த 2 சின்ன பசங்க ஏன்னு தெரியல சிரிச்சுட்டே இருந்தாங்க.
2. குருவினு டைட்டில நல்லா மேச் பண்ணிருக்காங்க.

குருவி விளக்கம்:
மலேசியா-ல இருக்கிறவங்க தமிழ்நாட்ல இருந்து பட்டுசேல, மாம்பழம், சில எல்க்ட்ரானிக்(?!) பொருட்கள் எல்லாம் கேப்பாங்களாம். அத கொண்டு போய் அங்க கொடுத்துட்டு வர்ரவங்க பேர்தான் "குருவி".

எப்படி பட டைட்டில் மேச் ஆயிடுச்சா???. :))))