கோடு குமார்

ரூம்ல மல்லாக்க படுத்து விட்டத்த வெறிச்சு பாத்துட்டு இருக்கார் நம்ம CK. நாம நல்லாதான எல்லா கேள்விக்கு yes, No, தெரியும், தெரியாது, No Idea-னு பதில் சொல்றோம், அப்புறம் ஏன் இவனுங்க "i will call you back" ஊட்டுக்கு அனுப்பிடறாங்க அப்படினு திங்க் பண்ணிட்டு இருக்கார்.

ஒரு வாரம் கழிச்சு ஒரு இண்டர்வியூக்கு போயிருக்கார்.

இன்டர். எடுப்பவர்: மிஸ்டர். குமரப்பன்.
CK: அது அப்பா, அம்மா வச்ச பேரு, எனக்கு நானே வச்சுகிட்ட பேர் கோடு குமார்.
இ.எ: கோடு குமார்???
CK:கோடுனா நீ நெனக்கிற line இல்ல மேன், கோடு, code kumar.
இ.எ:ஓஓஓ. அது என்ன code kumar???
CK:நான் படிச்ச கம்யூட்டர் சென்டர்ல நான் தான் நல்லா HTML கோடு எழுதுவேன். அத பாத்துட்டு அங்க இருந்தவங்க வச்ச பேர் தான் இது.
இண்டர்வியூ மேல நடக்குது..
.
.
.
.
இ.எ:நீங்க எதாவது என்கிட்ட கேக்கனும்னு விரும்பறீங்களா?
CK:இல்லை.
இ.எ எழுவதை பார்த்ததும் வேகமா எழுந்து கை குலுக்கிவிட்டு "i will call you back" னு சொல்றார்.
இ.எ: இதல்லாம் நாங்க தான் சொல்லனும்.
CK: ஆமா நீங்க தான் சொல்லனும், ஒரு சேஞ்சா இருக்கட்டுமேனு நான் சொன்னேன்.
இ.எ ஙே முழிக்கிறார்.


எப்படியோ முட்டி மோதி ஒரு கம்பெனில ஜாய்ன் பண்ணி ஒரு வருடம் முடிஞ்சுடுச்சு.
அன்னிக்கு அப்பதான் ஆபிஸ் வந்து சிஸ்டத்த ஆன் பண்ணிட்டு உட்கார்ந்திருந்தார். புதுசா ஜாய்ன் பண்ணின ஒருத்தர் பக்கத்துல வரார்.

அவ்ரோட டீட்டெய்ஸ் எல்லாம் கேக்கிறார் நம்ம CK.

ஆமா சார் சும்மா ஒக்காந்திருக்கீங்களே வேலை எதுவும் இல்லையா?
அத ஏம்பா கேக்குற?

சாரி சார். நான் எதுவும் கேக்கல.

அட அதுக்கில்ல சொல்றேன் கேளு.

+2 பெயிலாயிட்டதால் டுட்டோரியல் காலேஜ் போய் பாஸ் பண்ணினேன். நாம தான் டுட்டோரியல் காலேஜ் போய்ட்டமே அப்புறம் ஏன் இன்னொருக்கா காலேஜ் போகனும்னு கம்யூட்டர் சென்டர்ல சேந்து html படிச்சேன்.

அங்க கோர்ஸ்ச முடிச்சுட்டு வேல தேட ஆரம்பிச்சேன். நிறைய கம்பெனி அட்டென் பண்ணினேன். இங்க தான் என்னோட திறமைய பாத்துட்டு வேல கொடுத்தாங்க.

அப்படி என்னென்ன கேள்வி கேட்டாங்க.

ஒருத்தன் html பேஜ்ல மொதல்ல என்ன கோட் வரும்னு கேட்டான். html பேஜ் வேற என்ன வரப்போகுது அப்படினு நெனச்சிட்டு html தான் வரும்னு குத்துமதிப்பா சொன்னேன்.

அப்புறம் இன்னொருத்தன் 2 சர்வர் இருக்கு, பழைய சர்வர எடுத்துட்டு புதுச மாத்தனும்னா என்ன பண்ணுவீங்கனு கேட்டான்.

அதுல இருக்கிற வயரெல்லாம் கழட்டி இதுல மாட்டினா முடிஞ்சதுனு நானும் சொன்னேன்.

கடைசியா இன்னொருத்தன் வந்து சைட் மெயின்டன் பண்னுவியானு கேட்டான். அதுக்கென்ன 1-க்கு ரெண்டா மெயிண்டன் பன்றேனு சொன்னேன். ஆனா இப்போ தான் தெரியுது அவனுங்க கேட்ட சைட் வேற, நான் சொன்ன சைட் வேறனு.

ஆமாண்ணே இவ்ளோ சொல்றீங்களே, இங்க குறிக்கோள் என்னண்ணேனு கேக்கவும் நம்ம CK கண் கலங்குகிறார்.

அய்யயோ என்னாசுணே.

ஒன்னுமில்லப்பா. இவ்ளோ நாளா என் மனசுல மட்டும் இருந்தத மொத தடவையா உங்கிட்ட சொல்றேன் கேளு.

கம்யூட்டர் சென்டர்ல கோர்ஸ முடிச்சுட்டு வந்து, மை நேம் கோடு குமார், மை பாதர் நேம் ஈஸ்......, அப்படினு கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்னிட்டு போய் இன்டர்வியூ அட்டென் பண்ணினா அவனவன் "i will call you back, "i will call you back" னு சொல்றானே தவிர எவனும் திரும்ப கூப்பிடல. அதனால அன்னிக்கு எடுத்தேன் ஒரு சபதம்.

என்னிக்காவது நான் ஒரு கம்பெனில PM ஆகி இன்டர்வியூ வற்றவனையெல்லாம் "i will call you back", "i will call you back" னு சொல்லனும்னு சொல்லிட்டு வெறியோடு பார்க்கிறார்.

எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார் புதிதாக வந்தவர்.

16 நனைந்தவர்கள்:

வடுவூர் குமார் said...

ஐய்யையோ!
நான் அந்த மாதிரி குமார் இல்லை.
நீங்க கோடு போட்டா நான் ரோடு போடுகிற ஆள்?!!

TBCD said...

பி.எம்..ஆயிட்டீயா ராசா...

சொல்லவே இல்ல....

ஆசை அடங்கினதும் கதை வெளியே வருதோ.. மிஸ்டர். ஜெயக்" கோடு" குமார்.. ;)

MyFriend said...

congratulations.. பதவி உயர்வுக்கு. ;-)

நாமக்கல் சிபி said...

//congratulations.. பதவி உயர்வுக்கு//

Repeattttteeeey!

நாமக்கல் சிபி said...

//ஜெயக்" கோடு" குமார்//

Super Punch Machi!

ஜே கே | J K said...

//வடுவூர் குமார் said...
ஐய்யையோ!
நான் அந்த மாதிரி குமார் இல்லை.
நீங்க கோடு போட்டா நான் ரோடு போடுகிற ஆள்?!!//

ஐய்யையோ!

நான் சொன்னது இந்த குமார்(வடுவூர் குமார்) இல்ல இல்ல இல்ல....

ஜே கே | J K said...

// TBCD said...
பி.எம்..ஆயிட்டீயா ராசா...//

ம்க்கும்.

ஜே கே | J K said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
congratulations.. பதவி உயர்வுக்கு. ;-)//

இவங்க வேற இல்லாத ஊருக்கு வழி சொல்லிட்டு...

எங்க இப்படியெல்லாம் உங்களுக்கு தோனுது.

ஜே கே | J K said...

//நாமக்கல் சிபி said...
//congratulations.. பதவி உயர்வுக்கு//
Repeattttteeeey!//

இப்போ ரிப்பீட்டு ரொம்ப அவசியம்.


//ஜெயக்" கோடு" குமார்
Super Punch Machi!//

அய்யய்யோ இது என்ன சொ.செ.சூ ஆயிடும் போல இருக்கே.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
கப்பி | Kappi said...

:))

ரைட்டு மாப்ள...ட்ரீட்டு எப்போ? :))

ஜே கே | J K said...

ஒரு போஸ்ட் போட்டதுக்கு ட்ரீட் கேட்டா எப்பிடி கப்பி???

குசும்பன் said...

தம்பி சூப்பரு PM ஆனதுக்கு:) ஆமா எப்படி நம்ம மன்மோகனுக்கு வேட்டு வெச்சீங்க?

Divya said...

Congrats JK!

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் சுய சரிதை எழுதும் அளவு வந்ததற்கு

மங்களூர் சிவா said...

ஆஹா இத்தனை பேர் சொன்னதுக்கப்புறமும் இது உங்க சொந்த கதையில்லைன்னு நான் நம்பினா எப்பிடி!?!?!?

வாழ்த்துக்கள் ஜே.கே