யார் தான் கேட்பது?...

இப்போது அரசு சட்டம் கொண்டுள்ளது, கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென்று...

அச்சட்டத்தின் படி,

வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமாம்.

பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமாம்.

கார்களில் சீட் பெல்ட் அணிய வேண்டுமாம். சீட் பெல்ட் இல்லாத கார்களில் பொருத்த வேண்டுமாம்.

ஆட்டோ ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணிவது பற்றி பரிசீலித்து வருகிறோம்.

இதெல்லாம் சரிதான்.

சீக்கியர்கள் தங்கள் மத வழக்கப்படி தலையில் டர்பன் அணிந்திருப்பார்கள். அதனால் அவர்களுக்கு விலக்கு அளிக்கலாமா என்று அரசிடம் விளக்கம் கேட்கிறார்கள்.

அதுவும் சரிதான்.

ஆனால் 40+25=65+2 என்று போட்டுள்ள பேருந்தில் 100க்கு அதிகமான பேர் பயணிக்கலாமா?

அப்போது அவர்களுடைய பாதுகாப்பு என்னாவது?

இதை மட்டும் ஏன் யாரும் கண்டுகொள்வதில்லை...

2 நனைந்தவர்கள்:

selventhiran said...

காலை நேரத்துல ஒரு ஊரையே பஸ்ல ஏத்திக்கிட்டு போறானுங்க.. வசமா பிடிச்சிங்க பாயிண்டை...

ஜே கே | J K said...

ஒரு ஊர மட்டும் ஏத்திட்டு போனா பரவாயில்ல... அங்கங்க நிறுத்தி அந்தந்த ஊர ஏத்திக்கிறாங்க.

உள்ள எடமே இருக்காது ஆனா உள்ள போ உள்ள போ அப்படினா எங்க போரது?...