தெருவோரப் பூக்கள்

யாருக்காக
எதற்காக
ஏன் பூத்திருக்கின்றன
இந்த பூக்கள்...

எங்கோ விழுந்து
ஏனோ முளைத்து
எப்படியோ வளர்ந்து
பூத்து நிற்கின்றன...

எத்தனையோ
பாதங்கள் கடந்திருக்கும்
கண்கள் பார்த்திருக்கும்
இந்த செடியை...

பார்க்காத கண்களும்
கடந்து போன பாதங்களும்
அவகாசம் கேட்கின்றன.
இந்த மலரை பார்க்கவோ?...
பறிக்கவோ?...

0 நனைந்தவர்கள்: