சென்ற வாரம் அலுவலக நண்பரின் திருமணத்திற்காக தஞ்சாவூர் சென்றோம். அப்படியே தஞ்சை பெரிய கோவில் மற்றும் அரண்மனையை சுற்றி பார்த்துவிட்டு வந்தோம். அதன் சில தகவல்கள் மற்றும் கிளிக்கிய புகைப்படங்கள்.
கோவில் நடையை மதியம் 1.00 மணிக்கு மூடி மாலை 4.30 க்கு தான் திறக்கிறார்கள்.
சாலையிலிருந்து முகப்பு

கோவிலின் முன்புறம் கால்வாய் அமைப்பு
முன்பு கால்வாயாக இருந்திருக்கலாம், ஆனால் இப்போது குப்பைகள் கொட்டத்தான் இதை பயன்படுத்துகிறார்கள் போல. இதை செப்பனிட்டு பராமரித்தால் கோவிலுக்கு இன்னும் அழகு சேர்க்கும்.

கோவில் கட்டியதன் விளக்கப்படம்
இதை கோவிலின் முகப்பு வாயிலிலேயே விளக்கப்படமாக வரைந்து வைத்துள்ளார்கள்.

பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் நந்தி

குதிரை மற்றும் வெள்ளி யாணை வாகனம்


நந்திக்கு வலப்புறம் உள்ள அம்மன் கோவில்
பெரிய நந்தி

கோவிலின் முன்புறம் நிறுத்தி மன்னிக்கவும் கட்டி வைத்திருந்த யாணை. ஆசிர்வாதம் என்ற பெயரில் யாணையை காசு வாங்க வைக்கிறார்கள்.


இரும்புக்குண்டுகள் (கோவிலில் ஒரு மாடத்தினுள் இருந்தது)
அடி தளத்திலிருந்தே கல்லில் சித்திர வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. உற்று நோக்கினால் தான் தெரிகிறது ஒவ்வொரு சிறிய கல்லிலும் ஒவ்வொரு சித்திரம்.
பின்புறமிருந்து கோபுரம்

கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், வலப்புறம் பார்த்து உள்ளது, இடப்புறம் பார்த்து உள்ளது இரண்டுக்கும் சிறு வித்தியாசம் கூட நம்மால் காண முடியாது.
கோவிலில் நான் தெரிந்துகொண்ட ஒரு செய்தி, கோபுரத்தின் நிழல் கீழே விழுமாம், அதில் உள்ள கலசத்தின் நிழல் தான் கீழே விழாது என்று சொன்னார்கள்.
நம்ம ஊர் மக்கள் இதை மற்ற கோவில்களைப் போல்தான் வந்தோமா, வணங்கினோமா சென்றோமா என்று இருக்கிறார்கள். அதில் உள்ள சிற்ப்பங்கள், கட்டிக முறை, ஆகியவற்றை காண்பது இல்லை.
இப்போது கோவிலில் ஆங்காங்கே பல கற்றகள் உடைந்து இருப்பதை காணமுடிகிறது. பராமறிப்பு பணிகளும் நடக்கின்றன. ஆனாலும் கோவிலின் பொலிவு குறைந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.
(தொடரும்...)