என்னைப் பற்றி

வாழ்க்கையை முழுமையாக வாழத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு ஜீவன் நான். பிறந்தது வளர்ந்தது எல்லாம் நாமக்கல். இதுவரை எதுவும் சாதிக்கவில்லை, இனிமேலாவது ஏதாவது சாதிக்க வேண்டுமென நினைக்கிறேன் ஆனால் என்ன சாதிப்பது என இதுவரை ஒன்றுமே புரியவில்லை.

பள்ளி தொடங்கி கல்லூரி வரை எல்லாமே ஊரிலேயே முடித்துவிட்டு, ஒன்னரை வருடம் சுற்றிவிட்டு பின் தான் வேலை தேடலாம் என மொத முறையா வெளியூருக்கு கெளம்புறேன். பி.எஸ்.சி கம்பியூட்டர் சயின்ஸ் முடிச்சுட்டோம் வேல கண்டிப்பா கிடைக்கும் அப்படினு இங்க வந்து பாத்தா, எனக்கு முன்னாடியே எம்.சி.ஏ முடிச்சுட்டு ஏகபட்ட பேர் வேல தேடறேன் அப்படினு தேடிகிட்டு இருந்தாங்க. சரி ஆனது ஆகட்டும் அப்படினு நானும் இண்டர்வியூக்கு போக ஆரம்பிச்சேன். 4,5 கம்பெனிக்கு இண்டர்வியூக்கு போனேன், அங்க வெளிய போடா அப்படினு சொல்லாம "Call Back You" அப்படினு டீசண்டா வெளிய அனுப்பிட்டாங்க.

ஏன் எம்.சி.ஏ படிக்க வேண்டியது தானே, படிக்காம வர வேண்டியது அப்பறம் இங்க வந்து வேல கெடைக்கலனு ஓவர் பீட்டர் வுட வேண்டியது அப்படினு கேப்பீங்கனு எனக்குத் தெரியும். நானும் எம்.சி.ஏ படிக்கலாம் அப்பறமா ஏதாவது வேல கெடைக்குதானு பாக்கலாம் அப்படினுதான் நெனச்சேன், ஆனா பி.எஸ்.சி படிக்கும்போதே சும்மா இருக்காம கிளாஸ்-ல முந்திக்கொட்ட தனமா ஏதாவது பண்ணிக்கிட்டு இருப்பேன். அப்புறம் லாங்வேஜ்னு இருக்கே PASCAL, C, C++ அதுல கொஞ்சம் புரோகிராமும் எழுதிப்புட்டேன். உண்மையா சொல்றேங்க இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா புரோகிராம்லா எழுதியிருக்கவே மாட்டேன். அதுல C, C++ கொஞ்சம் ஆர்வக்கோளாறு ஆயிப்போச்சு. அது, அந்த சப்ஜெக்ட் வாத்திக்கும், எச்.ஓ.டி-க்கும் புடிக்கல போல, கிளாஸ்ல வந்து, நல்லா புரோகிராம் எழுதறான் இவன் ரொம்ப நல்லவண்டா அப்படினுட்டாங்க. இதுதான் டைம்னு நம்ம பசங்களும் நம்மள உசுப்பேத்தி விட்டுட்டாங்க. அதோடயாவது விட்டிருக்க்லாம், விட்டாங்களா? ம்ஹும்.. விடலையே...

நீ, பி.ஜி எல்லாம் பண்ண வேண்டாம், யூ.ஜி முடிச்சுட்டு வேல தேடிகிட்டு அப்புறம் பி.ஜிய கரஸ்ல பண்ணு அப்படினுட்டாங்க. அத நெனச்சுக்கிட்டு நானும் கொஞ்சம் ஓவராவே போய்ட்டேங்க. ஆமாங்க பி.ஜி பண்ணாம இப்படியே ஆணி புடுங்க போலாம் அப்படினு கெளம்பி வந்துட்டேன். இங்க வந்து பாத்தா எல்லா பயலுவலும், ஆணி புடுங்க போனா இங்கிலிபீசுல தான் பீட்டருவுடனும் அப்படிங்கரானுவ. நமக்கு ஏற்கனவே இங்கிலீசு சுட்டுபோட்டாலும் வராது, ஏன்னா நாமதான் பக்காவான தமிழனாச்சே. (ஆனா ஒரு மேட்டரு பாருங்க நா 1-வது படிக்க போனப்பவே உங்க அம்மா, அப்பா பேரு என்னானு கேட்டதுக்கு அம்மா பேரு மம்மி, அப்பா பேரு டாடி அப்படினு சொன்னவன். அதவச்சு ஊருக்குள்ள நம்ம பேரே மம்மிடாடி ஆகிபோச்சு. சரி மேட்ட்ருக்கு வருவோம்).

சரி எப்படியாவது ஆணி புடுங்க போய்ரனும்டா அப்படினு நானும் வேல தேட ஆரம்பிச்சேன். ஆனா ஒன்னும் ஒத்துவரல. சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும், நம்ம டாட் நெட் படிக்கலாம் அப்படினு படிக்க ஆரம்பிச்சேன். அந்த டைம்ல ஒரு கம்பெனில தகவல் தேடர வேலைல(வெப் ரிசர்ச்சர்) சேர்ந்துட்டேன். அதுல இருந்து கொஞ்சம் முன்னேறி, ஆணி புடுங்க ஆரம்பிச்சு இப்போ போய்கிட்டு இருக்கு.....

5 நனைந்தவர்கள்:

Balamurali said...

ஜெயா!
சாரல் மனதுக்கு ரொம்ப குளிர்ச்சி!

ஜே கே | J K said...

நன்றி பாலா...

Anonymous said...

thalaivaa.. kalakkureenga.. ungal aarvathukku paarattukal...

ஜே கே | J K said...

நன்றி சங்கர்....

Anonymous said...

Nice
i don't have any tamil fonts
nalla irukku