என் செல்லம்

தினமும்
உனைப் பற்றி
கவிதைகள் எழுதுகிறேன்.
எழுதி முடித்தவுடன்
படித்துவிட்டு
கிழித்தும் விடுகிறேன்...

ஏனென்றா கேட்கிறாய்...
அதைப் படித்து
நீவேறு யாருக்காவது
பிடித்துப் போய்விட்டால்
என்ன செய்வேன்...

எதற்காகவும்
உனை
இழக்க முடியாதடா
என் செல்லம்...

2 நனைந்தவர்கள்:

நாமக்கல் சிபி said...

//அதைப் படித்து
நீவேறு யாருக்காவது
பிடித்துப் போய்விட்டால்
என்ன செய்வேன்...
//

ஆஹா! அற்புதம்!

நந்தா said...

//அதைப் படித்து
நீவேறு யாருக்காவது
பிடித்துப் போய்விட்டால்
என்ன செய்வேன்...//

மிக அருமையான வரிகள். காதலர்களுக்குள்ளே நடக்கிற சின்னச் சின்ன சில்மிஷ சிணுங்கல்களை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.