உன்னோடு நான்


கற்பனையை எட்டாத கவிதையிலும்
தேடி முடியும்
தேடல்களிலும்
நிஜங்களை உரிக்கும்
உண்மையிலும்
நீ இல்லாத போது
நான் வாடுகிறேன்.
என் விருப்பங்கள்
உனை வேண்டுவதல்ல...
இருந்த போதிலும்கூட
உன் நிஜத்தோடு
நிழலாய்
நானும் வர ஆசைப்படுகிறேன்.

0 நனைந்தவர்கள்: