மாறாத ஒரு புன்னகை

தவிப்போ
எவ்வித சோகமோ இல்லாமல்
இனிமையாகவே அமைந்துவிடும்
தொடக்கங்களாக
எதிர்பார்க்கிறேன்
பிரிவிலும் ஒரு புன்னகை...

உறுதியான முடிவுகளும்
பொருளுணர்ந்த பிரிவுகளும்
சூழ்நிலையில்
துயரமாகவே அமைய
கை கோர்த்து நடந்த தருணங்களையும்
பேசிச் சிரித்த பொழுதுகளையும்
நினைத்து சிரிக்க முற்படுகையில்
உனை
பார்வையிலிருந்து
மறைக்கிறது கண்ணீர்...

எல்லாம் மறைத்து
கை கொடுத்து
வழி அனுப்பும் வேளையில்
எதையோ உணர்த்த
கையில் பட்டு தெறிக்கிறது
கண்ணீர்...

நினைப்பது போல்
அமைவதில்லை வாழ்க்கை
கவிதையும் கூட...

குண்டாவது எப்படி???....


குண்டாவது எப்படி???....

நான் 10-ம் வகுப்பு படிக்கும் போது நல்லா குண்டா இருந்தேன். அதற்கப்புறம் கொஞ்சம் இளைத்து சரியான அளவு இருந்தேன்.

அப்படியே கல்லூரி நாட்களிலும் தொடர்ந்ததால் எந்த கவலையும் இல்லை. ஆனா என்னிக்கு சென்னை வந்து ஓட்டலில் சாப்பிட ஆரம்பிச்சேனோ அப்ப இருந்து கொஞ்சம் கொஞ்சமா மெலிய ஆரம்பிச்சுடுச்சு உடம்பு. எனக்கு அப்படியே இருப்பது போல தான் தெரியுது.

ஆனா ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போது, ஏண்டா இப்படி ஆயிட்ட என்று கேட்கிறார்கள். இப்படி எல்லாரும் ஊருக்கு போகும்போதும் கேக்கிறதால டென்சன் தான் ஆகுது. இப்படிதான் நேத்து ஊருக்கு போயிருந்த போதும் இப்படி பிரச்சனை ஆரம்பிக்க நான் அடுத்த முறை ஊருக்கு(2 மாதம் கழித்துதான் போவேன்) வரும்போது குண்டாதான் வருவேன் அப்படினு சவால்(?!) விட்டுட்டு வந்துட்டேன்.

ஆனா என்ன பண்றதுனு ஒன்னும் புரியல. ஊரில் இருந்து வந்ததிலிருந்து ஆபிஸ்ல எல்லோரிடமும் கேட்டால் ஆளுக்கு ஒரு ஐடியா கொடுக்குறாங்க. கடைசில ஒருத்தன் வந்து ஏண்டா, பிளாக்ல மேட்டரே இல்லாம பதிவு போடுறீங்களே, அதுக்கு பதிலா இது போல உருப்படியான(?!) பதிவு ஏன் போடகூடாது கேட்டான்.

அப்புறம் தான் நம்ம பதிவுலகில பல ஜாம்பவான்கள் முதல் ஒல்லிபிச்சாண்டிகள் வரை எல்லா வகையிலும் இருக்கிறார்களே கேட்டால் ஐடியா கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதை கேட்கிறேன்.


"குண்டாவது எப்படி???"

நான் கேள்விபட்ட சில வழிகள்:-

1. தினமும் மூன்று வேளையும் நல்லா சாப்பிடனும். சாப்பிட்ட உடனே தூங்கிடனும். இப்படி தினமும் செஞ்சா ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்குமாம்.

2. கவலைகளை மறந்து இருக்கனுமாம். கவலை இருந்தாவே உடல் நலமாக இருக்காதாம்.

3. "குடிமகன்" ஒருத்தர் கொடுத்த ஐடியா, வாரம் ஒரு பீர் சாப்பிட நல்லா குண்டாயிடலாம் என்றார். அதற்கு அடிமையாயிட்டா என்ன பண்ணனு கேட்டதுக்கு, அதுக்கு தனியா ட்ரீட்மெண்ட் பண்ணிக்கலாம்கிறார்.

4. பாலும் தேனும் கலந்து குடிச்சா நல்ல பலன் இருக்கும்னு சொல்றாங்க.

டிஸ்கி: மக்கா, இதுல குண்டாவதற்கும் ஐடியா கொடுங்க, அப்படியே குண்டாயிட்டா ஒல்லியாவதற்கும் ஐடியா கொடுங்க....

ஏன்னா, நீங்க கொடுக்குற ஐடியாவுல ஓவரா குண்டாயிட்டா, ஒல்லி ஆவுரது எப்படினு தெரியனுமில்ல அதுக்கு தான் இந்த முன்னெச்சரிக்கை....

உன் நினைவு...


ஆம்!
கொஞ்ச நாட்களாய் தான்
எந்த சூழ்நிலையில்
எப்படி இருந்தாலும்
'அந்த' பாடலை கேட்கும் போது
நீ தான்
நீ மட்டும் தான்
மனதில் தோன்றி
மறையாமல் நிற்கிறாய்...

விழுங்க முடியாத வேதனையில்
தவிக்கிறேன்
துடிக்கிறேன்.

தொலைவில் இருந்து கொண்டு
தொல்லைதான் தருகிறாய்
நினைவில்...

இம்சையாய் இருக்கின்ற போதும்
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்...

பாடல் முழுவதையும்
கேட்க வேண்டுமென
ஆசைதான்.
ஆனால்
முதல் வரியின் தொடக்கத்திலேயே
உன்னில் மூழ்கி
பாடலை மறக்கிறேன்.
மீண்டும் கேட்க எத்தனிக்கையில்
மீண்டும்
அதே தொடக்கம்
அதே உன் நினைவு....

பதிவர் பட்டறை


சென்னை வலைபதிவர் பட்டறை ஆகஸ்ட் 5, நண்பர்கள் தினத்தில் நன்றாக நடந்தது. கலந்து கொண்டவர்கள், கலந்துகொள்ள முடியாதவர்கள் என பல நண்பர்கள் கடந்த 50 நாடகளாக அயராது உழைத்துள்ளனர்.

பெரிய அளவில் எதையும் செய்யாத போதும் 'சாட்'டில் மட்டுமே பேசிக்கொண்டிருந்த பல நண்பர்களை நேரில் சந்திக்க பெரிய வாய்ப்பாக அமைந்தது. புதிதாக வந்தவர்கள் மெயில் ஐடி துவங்குவது முதல் பதிவு எழுதுவது வரை அதிக ஆர்வம் காட்டினார்கள்.

நான் மேலே கணினி அறையில் இருந்ததால் அங்கே நடந்த சில நிகழ்வுகள்:

முதல் நாள், சனிக்கிழமை மாலை 4.30 க்கு அங்கு செல்வதற்கு முன்பாகவே சிவக்குமார், வினையூக்கி, ஜெயா, லக்கிலுக், மற்றும் சில சென்னை பலகலைகழக ஆசிரியர்கள், மாணவர்கள் அங்கிருந்தனர். சிறிது நேரத்தில் கணினிகள் வந்தவுடன் மா.சி என்னையும், வினையூக்கியையும் மேல்தளத்திலிருந்து கவனித்துக்கொள்ள சொன்னார். அதற்கு முன்பே SIFY நிறுவனத்தினர் அங்கு வந்து இணைய வசதிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். பின் கணினி கொண்டுவந்தவர்களுடன் இணைந்து எல்லா கணினிகளையும் மேல் தளத்திற்கு எடுத்து சென்றோம். அங்கு வகுப்பில் இருந்த இருக்கைகளை கணினி வைக்க வசதியா மாற்றி அமைத்தோம். பின் தான் தெரிந்தது, கணிகளுக்கு மின்சாரம் கொடுக்க வச்தியாக Extension Boxes எதுவும் இல்லை.

அப்போது விக்கியும் வந்திருந்தார். பிறகு அவர் தன் நண்பரிடம் கேட்க, நந்தா சென்று எடுத்து வந்து 8 மணிக்கு கொடுத்தார். அதற்குள் அருள் தன் அலுவலகத்திலிருந்து காப்பி இயந்திரம் எடுத்து வந்திருந்தார். அதற்குள் சுந்தருடன் இணைந்து சில பேனர்களை ஒட்டினோம். Extension Boxes வருவதற்குள் கணினிகளை எடுத்து வரிசைப்படுத்தி வைத்திருந்தனர், அதனை பராமறிக்க வந்திருந்தவர்கள். பின் கணினிகளை இணைத்து ஆன் செய்தால் பல கணினிகள் ஆன் ஆகவில்லை. இனையமும் சரிவர இயங்கவில்லை. பின் ஒவ்வொன்றாக சரி செய்யவேண்டியதாயிற்று.

அப்போதும் Extension Boxes பத்தாத்தால் ஒரு கணினியை சரிபார்த்து, அதை ஆஃப் பண்ணிவிட்டு, வயரை எடுத்து அடுத்த கணினியில் சொறுகி அதை சரி செய்ய வேண்டும். ஒன்னு சிஸ்டம் பூட்டே ஆகாது, இல்லைனா நெட் கனெக்ட் ஆகாது. இப்படியே ஒவ்வொரு சிஸ்டமா செக் பண்னுவதற்குள் போதுமென்றாகிவிட்டது.

மணி 9.30 க்கு மேல் ஆக, காலையில் சீக்கிரம் வர வேண்டுமே என்று ஒவ்வொருவராக கிளம்பிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் சென்றவுடன் நானும் கணினி கொண்டுவந்தவரும் சரி செய்து கொண்டிருந்தோம். 3 கணினிகளைத் தவிர எல்லா கணினிகளையும் சரி செய்துவிட்டோம். ஒரு கணினிக்கு வேறொன்று நாளை கொண்டுவருகிறேன் என்றார், மற்ற இரண்டை காலையில் சரி செய்து விடுகிறேன் என்றார். சரி என்று அவர் கிளம்பிய உடன் கீழே ஆடிட்டோரியம், மேலே இருந்த கணினி அறைகளை பூட்டிவிட்டு கிளம்பினேன். பல்கலைகழக பாதுகாவலர் வந்து கோர்ட்டில் சீல் வைப்பார்களே அதுபோல ஒரு பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டு, அதை பூட்டில் ஒட்டிய பின்பு தான் என்னை கிளம்ப விட்டர். இதை நாளை காலை அந்த கண்ணாடி போட்டவர்(மா.சி யை) வந்தால் தான் திறப்போம் என்றார்.

ஞாயிறு காலை, சிவக்குமார், பொன்ஸ் ஆகியோர் சில Extension Boxes கொண்டுவந்தார்கள். உண்மைத்தமிழன், தகடூர் கோபி, மற்றும் அதியமான் டெஸ்க்கை சரி செய்து கணினிகளை வரிசைப்படுத்த மிகவும் உதவினார்கள். பின் தான் எல்லா கணினிகளிலும் எ-கலப்பை நிறுவ வேண்டியதாயிற்று. 9 - 9.30 க்குள் 5 முறைக்கு மேல் மின்சாரம் நின்று வந்ததால், கொஞ்சம் கலக்கம் ஆகிவிட்டது. பின் எதுவும் பிரச்சனை இல்லாமல் சென்றது. அவ்வப்போது வகுப்புகளில் ஏற்பட்ட கணினி பிரச்சனை, இணைய பிரச்சனையை வந்திருந்த பராமறிபாளர்கள் விரைவாக சரி செய்து நல்ல முறையில் நடைபெற மிகவும் உதவி செய்தார்கள்.

பட்டறையில் சில:

பலர் எப்படி இ-கலப்பையை இன்ஸ்டால் பண்ண வேண்டும், அதை பயன்படுத்தி எப்படி தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும் கேட்டு தெரிந்துகொண்டனர்.

எப்படி மெயில் அக்கவுண்ட் திறக்க வேண்டும், எப்படி புதிதாக பிளாக் எப்படி நிறுவ வேண்டும் என்று கேட்டு தெரிந்துகொண்டனர்.
சில பதிவர்கள் தங்களுடைய பதிவுகளில் இருந்த ஐயங்களை கேட்டு தெளிவு படுத்திகொண்டனர்.

அங்கிருந்தவர்களை அதிகம் கவர்ந்தது, சங்கத்து ஆட்கள் அனைவரும் ஒரே மாதிரி உடையில் வந்தது. பின் அதென்னங்க "வ. வா. ச." என்று கேட்டு தெளிவு படுத்திக்கொண்டனர்.

என்னிடம் அட்டை இல்லாததால், ஒருவர் "நீங்களும் கலந்துகொள்ள வந்திருக்கீங்களா?" என்ற போது, இல்லீங்க, நான் ஏற்கனவே பதிவு எழுதுகிறேன், இங்கே சொல்லிதர வந்தேன், என்றேன். அதற்கு அவர் நம்பாதது போல் உங்க பதிவு முகவரி சொல்லுங்க என்றார். நான் என் பதிவை காட்டிய பின்பும் கூட அவர் பார்த்த பார்வை என்னை நம்பவில்லை என்று தெரிந்தது.

இவை எல்லாவற்றையும் விட என்னை கவர்ந்தது, அங்கு கணினிகளை பராமரிக்க மற்றும் இணையத்தை சீர்படுத்த SIFY-ல் இருந்து வந்திருந்த நண்பர்கள், விழா முடியும் வேளையில், எப்படிங்க தமிழில் எழுதுவது, எப்படி பிளாக் ஆரம்பிப்பது என்று கேட்டதுதான்.

மேலும் பலர் பொதுவாக கேட்டது, எங்களுக்கு சந்தேகம் வந்தா எப்படி உங்கள கேக்கிறது என்பதுதான்.

எல்லாம் முடிந்து கிளம்பிய விட்டோம், பின் அங்கே பல உதவிகளை செய்த குமார் என்பவருக்கு நன்றி சொல்ல அலைபேசியில் அழைத்த போது, "ரொம்ப நன்றிங்க, ரொம்ப நல்லாயிருந்தது, கூடிய சீக்கிரம் நாங்களும் பதிவு எழுதுறோம், எழுதிட்டு சொல்கிறோம்" என்று முகவரியும் வாங்கிக்கொண்டார்.

பல புதிய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.

பட்டறை பலருக்கு பலவித எண்ணங்களை விதைத்திருந்தாலும், நமக்கும் சில விசயங்களை தெளிவு படுத்தியுள்ளது.

அடுத்த பட்டறை கணினிகளை வைத்து வகுப்புகள் இருந்தால் எப்படி அமைக்க வேண்டும் என்ற நல்ல தெளிவு கிடைத்துள்ளது.
மேலும் வந்திருந்தவர்களை அதிகம் கவர்ந்தது சங்கத்தினர் அனைவரும் ஒரே மாதிரியான உடையில் வந்ததே!.

சென்னை வலைபதிவர் பட்டறை - புகைப்படங்கள்

சென்னை வலைப்பதிவர் பட்டறை:
சில புகைப்படங்கள்:



சென்னைப் பல்கலைகழக மெரினா வளாக முகப்பு



சென்னை பல்கலைகழகத்தில் கலந்துரையாரல் நடைபெற அளிக்கப்பட்ட அரங்கு (குளிர்சாதன வசதியுடன்)



எதையோ தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருந்த 'தல'



'சிபி'க்கு மட்டும் 'தல' கொடுத்திருந்த சட்டை



பினாத்தலாரின் வகுப்பில் நல்ல பிள்ளளயாக நடிக்கும் 'தல'



என்னுடை பார்வையில் மேலும் தகவல்களை அடுத்த பதிவில்...

முடிவு தரும் மரணம்


என்றாவது
தேடல்கள் இல்லாதிருப்பேன்.
தேவை இன்றி அல்ல...
தேவையே இல்லாமல்...

என்னுடைய வாழ்க்கை
தேவை
தேடல் என
சுவாரஸ்யமாக இருக்கிறது.

தேவையின் அவசரம்
தேடலை முடுக்குகிறது.
கிடைத்ததன் திருப்தி
இன்றுவரை இல்லை...

அடுத்த தேடலை நோக்கியே
அவசர வாழ்க்கை...
ஆசை என்றில்லாமல்
அவசியம் என்றே
தீர்மானிக்கப்படுகின்றன
தேடல்கள் அனைத்தும்.

மனமென்ற குரங்கு
தாவிக்கொண்டே இருக்கிறது
இருப்பினும்
என்றாவது
தேடல்கள் இல்லாதிருப்பேன்.
தேவை இன்றி அல்ல...
தேவையே இல்லாமல்...

விடாது சரக்கு...

உன்னைத் தேடி
எப்போதும்
என் பயணம்
அமைவதில்லை
வழியில் காணும் போது
உனக்காக
காரணம் அமைத்து
நுழைகிறேன் உள்ளே!


இதுதான் வேண்டுமென்று
எப்போதும் சொன்னதில்லை
இருப்பதை வைத்து
சந்தோசப்படும் மனம்
இங்கு மட்டுமே!


ஒத்துக்கொள்ளாத போது
போன வேகத்தில்
வெளியே வந்தாலும்
ஏற்றுக்கொள்கிறேன்
சுயநினைவில்லா
சுரணையோடு....


காலம் கடக்கும் வேளையில்
விரட்டப்பட்டு
இருப்பிடம் நோக்கி
எழுந்து நடக்கிறேன்
தள்ளாடியபடியே
டாஸ்மார்க்கிலிருந்து.....

மலர்களே! மலர்களே! மலருங்கள்







புகைப்பட போட்டிக்கு

புகைப்பட போட்டிக்காக எல்லோரும் புகைப்படம் எடுத்து போடறாங்க. நம்மளும் போடலாமே அப்படினு நான் கிளிக்கிய ரெண்டு புகைப்படங்கள்.

ஏற்காடு சென்றபோது அங்கே மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஒரு மலர்.



இது தஞ்சாவூர் சென்றபோது, அரண்மனை வளாகத்தில் ஒரு தாய் ஆடு குட்டிகளுக்கு பால் கொடுத்த காட்சி

இராஜ ராஜ சோழன் நான்
என் தஞ்சை அரண்மனை

அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள அமைப்பு விளக்கப்படம்
மணி மண்டபம்
மணி மண்டபம் சுற்றி சுற்றி கட்டப்பட்டுள்ள முறை அழகாக இருக்கிறது. அந்த சிறிய படிகட்டில் நாம் செல்வதே சிரமமாக உள்ளது, அப்போது அவர்கள் எப்படி சென்றார்கள் என்பது வியப்பாக உள்ளது.
சத்திரபதி சிவாஜியின் காசுகள்

தம்புரா மற்றும் வீனை
தர்பார் ஹாலில் மேற்கூரை வண்ண ஓவியங்கள்

தர்பார் மஹால் பெரியதாக உள்ளது. மேற்கூரையில் உள்ள வண்ண ஓவியங்கள் இன்னும் பிரகாசமாக ஜொலிக்கின்றன. இவை சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது, நிறைய ஓவியங்கள் அழிந்தும், அழிந்துகொண்டிருப்பதையும் காண முடிகிறது.
மணி மண்டபம் முன் இருந்த சிலை
மணி மண்டபத்திலிருந்து பெரிய கோவில்
அரண்மனையை சுற்றிப்பார்க்க சிறியவர்க்கு ரூ. 5, பெரியவர்களுக்கு ரூ.10, புகைப்படம் எடுக்க ரூ.30, வீடியோ புகைப்படம் ரூ.150 என பணம் வசூலிக்கிறார்கர்கள். இதையே ஒரு அரண்மனையின் பல இடங்களில் வசூலிப்பதுதான் கொடுமையாக இருக்கிறது.

அரண்மனை கட்டிட அமைப்பு நம்மை வியக்க வைக்கிறது. சில பகுதிகள் மட்டுமே பராமறிக்கப்படுகின்றன. சில பகுதிகள் செப்பனிடப்படுகின்றன. பல பகுதிகள் கேட்பாரற்று கிடக்கிறது. தர்பார் ஹால் கூட பராமரிக்கப்படுவதில்லை. இப்படியே சென்றால் பாதி பாழடைந்த நிலையில் இருக்கும் அரண்மனை இன்னும் சிறிது காலத்தில் அழைந்துவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.

அரண்மனையில் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. ஆனால் 4,5 படிகளே அதில் இறங்கி பார்க்க முடிகிறது. அதற்கு மேல் உள்ளே செல்ல முடிவதில்லை. வெளிச்சம் இல்லாமலும், பராமறிக்கப்படாமலும் இருக்கிறது.

இராஜ ராஜ சோழன் நான்
நான் ஆண்ட தஞ்சை தேசம் தான்


சென்ற வாரம் அலுவலக நண்பரின் திருமணத்திற்காக தஞ்சாவூர் சென்றோம். அப்படியே தஞ்சை பெரிய கோவில் மற்றும் அரண்மனையை சுற்றி பார்த்துவிட்டு வந்தோம். அதன் சில தகவல்கள் மற்றும் கிளிக்கிய புகைப்படங்கள்.

கோவில் நடையை மதியம் 1.00 மணிக்கு மூடி மாலை 4.30 க்கு தான் திறக்கிறார்கள்.

சாலையிலிருந்து முகப்பு



கோவிலின் முன்புறம் கால்வாய் அமைப்பு
முன்பு கால்வாயாக இருந்திருக்கலாம், ஆனால் இப்போது குப்பைகள் கொட்டத்தான் இதை பயன்படுத்துகிறார்கள் போல. இதை செப்பனிட்டு பராமரித்தால் கோவிலுக்கு இன்னும் அழகு சேர்க்கும்.

கோவில் கட்டியதன் விளக்கப்படம்

இதை கோவிலின் முகப்பு வாயிலிலேயே விளக்கப்படமாக வரைந்து வைத்துள்ளார்கள்.


பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் நந்தி

குதிரை மற்றும் வெள்ளி யாணை வாகனம்


நந்திக்கு வலப்புறம் உள்ள அம்மன் கோவில்
பெரிய நந்தி



கோவிலின் முன்புறம் நிறுத்தி மன்னிக்கவும் கட்டி வைத்திருந்த யாணை. ஆசிர்வாதம் என்ற பெயரில் யாணையை காசு வாங்க வைக்கிறார்கள்.



இரும்புக்குண்டுகள் (கோவிலில் ஒரு மாடத்தினுள் இருந்தது)




அடி தளத்திலிருந்தே கல்லில் சித்திர வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. உற்று நோக்கினால் தான் தெரிகிறது ஒவ்வொரு சிறிய கல்லிலும் ஒவ்வொரு சித்திரம்.
பின்புறமிருந்து கோபுரம்

கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், வலப்புறம் பார்த்து உள்ளது, இடப்புறம் பார்த்து உள்ளது இரண்டுக்கும் சிறு வித்தியாசம் கூட நம்மால் காண முடியாது.

கோவிலில் நான் தெரிந்துகொண்ட ஒரு செய்தி, கோபுரத்தின் நிழல் கீழே விழுமாம், அதில் உள்ள கலசத்தின் நிழல் தான் கீழே விழாது என்று சொன்னார்கள்.

நம்ம ஊர் மக்கள் இதை மற்ற கோவில்களைப் போல்தான் வந்தோமா, வணங்கினோமா சென்றோமா என்று இருக்கிறார்கள். அதில் உள்ள சிற்ப்பங்கள், கட்டிக முறை, ஆகியவற்றை காண்பது இல்லை.

இப்போது கோவிலில் ஆங்காங்கே பல கற்றகள் உடைந்து இருப்பதை காணமுடிகிறது. பராமறிப்பு பணிகளும் நடக்கின்றன. ஆனாலும் கோவிலின் பொலிவு குறைந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.

(தொடரும்...)

என்னோட எட்டு

பிரியா மற்றும் தேவ் ஆகியோரின் பாசமான(?!) அழைப்பை ஏற்று நானும் எட்டு போடறேன்.

திடீர்னு, நம்மள பத்தி எட்டு பெருமையான விசயங்கள் சொல்ல சொன்னதும் கொஞ்சம் தடுமாறிப்போயிட்டேன். கண்ணகட்ட ஆரம்பிச்சிடுச்சு. அப்புறம் சோடா குடிச்சுட்டு, தெளிவாயிட்டு யோசிச்சா ஒன்னுமே தேரல. கஷ்டப்பட்டு எட்டு விசயங்கள் கண்டுபிடிச்சிருக்கேன், படிச்சு தெரிஞ்சுக்குங்க...

1. எனக்கு அதிகம் நண்பர்கள் அப்படினு சொல்லிக்கனும்னு ஆசைதான். ஆனா என் நட்பு வட்டம் சின்னதுதான். எல்லோரையும் நண்பர்களா என்னால ஏத்துக்க முடியல. நம்ம அலைவரிசைக்கு யாரெல்லாம் ஒத்து வற்றாங்களோ (முன்ன், பின்ன்), அப்படி கொஞ்சம் யோசிக்கிறதுனால நண்பர்கள் எண்ணிக்கையில் குறைவு. எண்ணிக்கை முக்கியமில்லை, எப்பவுமே உண்மையான நண்பர்களா இருக்கனும் அப்படினு நினைக்கிறேன். நண்பர்கள் என்பதே பெருமை பட வேண்டிய விசயம் தானே!

2. அப்பப்ப இந்த நேர்மை குணம் வந்து படுத்தற பாடு நம்மால தாங்க முடியல. எல்லா நேரத்திலையும் நான் நேர்மையா இருக்கேனு சொல்ல முடியாது, சில சமயங்கள்ல நேர்மையா இருக்கனும் அப்படினு ரொம்ப உறுதியா, நேர்மையா செயல்படுவேன். யாருமே இல்லாத ரோட்டுல சிக்னல் போட்டிருக்குனு, கிராஸ் பண்ணாம நின்னுட்டிருப்பேன். எப்பவாதும் அதை நினைச்சு பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கும்.

3. இப்படிதான் கவிதை எழுதுறேன் அப்படினு கொஞ்ச பேர்த்த (அதாங்க நம்ம நண்பர்களை) கொடுமை படுத்திகிட்டு இருக்கேன். சிலர் படிச்சுட்டு விதி நொந்துகிட்டு "சூப்பர்" அப்படினுட்டு போவாங்க. சிலர் ஒன்னும் சொல்றதில்லை. அவங்கள்லாம் ஒன்னா சேந்து அடிக்கப் போறதா சிலர் சொன்றாங்க.(கொஞ்சம் பயமாதான் இருக்கு). அடிவாங்கினாலும் நாம் கவுஜர் அப்படிங்கறது பெருமைபட விசயம் தானே!

4. அப்பா, அம்மாவுக்கு ரொம்ப நல்ல பிள்ளை நான். அத பண்ணாத, இத பண்ணாத அப்படினு கட்டுபாடுகள் போட்டு வளர்க்கப்படுகிற பிள்ளைகளுக்கு மத்தியில், எங்க வீட்ல கட்டுபாடுனு எதுவும் கிடையாது. என்மேல அவ்ளோ நம்பிக்கை வச்சிருக்காங்க. ஒரு சிலர் அவங்க வீட்டைபற்றி சொல்லும் போது நமக்கு இவ்வளவு சுதந்திரம் அப்படினு ரொம்ப பெருமையா இருக்கு.

5. எதையும் கொஞ்சம் சீக்கிரமா நம்பிடுவேன். இதனால சில சமயம் ஏமாந்தும் போயிருக்கேன்.

6. என்னால எதையும் மறைச்சு வைக்க முடியாது. சீக்கிரமாவே உளறிடுவேன். சாதாரணமா சொன்ன விசயத்த மறந்துடுவேன். ஆனா யாரிடமும் சொல்ல வேண்டாம்னு சொன்ன மேட்டர் தான் மொதல்ல நம்ம ஞாபகத்துக்கு வரும். வார்த்தைக்கு வார்த்த அதான் வந்து நிக்கும். கடைசில சொல்லிட்டுதான் அய்யய்யோ சொல்லிட்டமேனு நினைப்பேன்.

7. நாட்டுக்கு பெரிய தொண்டு செய்யனும் அப்படினு எல்லாம் ஒரு நோக்கமும் இல்லை. ஆனா நாம் பிறந்த ஊருக்கு, நாம் இங்கு தான் இருந்தோம் எனும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்துகொண்டே வருகிறது. இப்படி ஒரு எண்ணம் தோன்றியதே பெருமை தானே!

8.கடைசியா, அதாங்க எட்டாவதா, நான் பிளாக் எழுதினதே ஒரு பெருமையாதான் நினைக்கிறேன். பிளாக் எழுதலைனா இவ்ளோ(?!) நண்பர்கள் கிடைச்சிருப்பீங்களா?.

எட்டு போட:

1.
நந்தா

2.
இம்சை அரசி

3.
கமல்

4.
ஜி

5.
இராம்

6.
கோவி. கண்ணன்

7.
பாலா

8.
நாமக்கல் சிபி


விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.


2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

பி.கு: இதுபோல் விளையாட்டை ஆரம்பிப்பவர்கள் 2,3 இது போல் சிறிய எண்ணாக கொடுக்கவும். அப்பாடி இந்த 8 முடிப்பதற்குள் .....அம்மாடியோவ் நம்மால முடியாது சாமி...

100-வது நாள் கொண்டாட்டம்

நண்பர்களுக்கு வணக்கம்,

எல்லாரும் பிளாக் எழுதுறாங்க அப்படினு நானும் ஒரு வேகத்துல பிளாக் ஆரம்பிச்சு, வணக்கம்னு ஒரு பதிவும், ஒரு கவிதை பதிவும் போட்டாச்சு. அப்புறம் யோசிச்சா என்ன எழுதறதுனு ஒன்னுமே புரியல. சரி நம்ம அண்ணாத்த்கிட்டயே ஐடியா கேட்டுறுவோம்னு சிபி அண்ணாத்தைக்கு போன் போட்டேன்.


அண்ணன் தான் ஐடியா குடுத்த்தாரு. இப்படிதான் ஒன்னுமே புரியாது, அதையும் ஒரு மொக்க பதிவா போட்டிரு, அவ்வளவுதான். இப்படிதான் பிளாக் எழுதனும்னு, ரொம்ப உறுதுணையா நின்னு, முன்னேற உதவி செஞ்சிருக்காரு. அப்படி பட்ட நம்ம அண்ணனுக்கு இந்த 100-வது நாளில் நன்றி சொல்ல நானும், என் பிளாக்கும் கடமைப்பட்டுள்ளோம்.


அப்புறம் நான் எழுதுனதையும் மதிச்சு, படிச்சு கமெண்ட் போட்ட உங்களுக்கு பெரிய டாங்ஸ். உங்களோட இந்த சப்போர்ட் இருந்தா பின்னாளில் ஒரு வைரமுத்து மாதிரியோ, வாலி மாதிரியோ இல்லாம ஒரு புதுமாதிரியான கவிஞனை எதிர்பார்க்கலாம்.


100 நாள் ஆயாச்சு. ஏதாவது பண்ணனுமே அப்படினு பயங்கரமா யோசிக்க ஆரம்பிச்சேன். இப்போதைக்கு அதிகம் பேசப்படறது கவிதை, அதுவும் "கொலைவெறிக் கவிதை"னு ஒரு புது வடிவம் வந்திருக்கு. அதில் ஏதாவது பண்ணலாமேனு முடிவெடுத்தேன். அப்பதான் ஒரு ஐடியா வந்தது. கொலைவெறி கவிதை எழுத ஒரு கருவி பண்ணினா என்ன?. அதன் பயனாக ஏதோ என்னால் ஆன ஒரு கருவியை இப்போதைக்கு உருவாக்கியுள்ளேன். அது கொடுத்த

சாம்பிள் கவிதை:

எரிச்சலுற்று
உமக்கேது சில்லுகள்
தொடங்குகின்றன வார்
கெக்கெபிக்கே நானும் பாப்பாக்கள்
புகை நெருங்குகின்றனர்
தெக்கியாரைக் வண்டி பார்க்கிறேன்
கடிக்கட்டும் செருப்பு
கொலைவெறி

மூட்டிவிட்டு
தொலைவில் என் கவனத்தைச்
நிழல்களை
வலித்து புகை
கால்வைத்தும்
காமமுமாய் செய்து
மிதித்துப்போட செல்கிறது
சிதறடிக்க வாசல்
எதிர்ப்படுக்கை
வெப்பம் வெப்பம் உரசியபடிச்
தெக்கியாரைக் என்று
பீடியை
கொலைவெறி வாசலுக்கு
பூனனயின் காலாற
பொருக்கியபடியே

என்னை
கால சூழ்ந்து ஒன்றிலிருந்து
சன்னல் எச்சமாய்
உரசல்
வெப்பம் மூட்டிவிட்டு
என்னை
சுழலத் அழைக்கிறேன்
கண்களுக்குள் கொலைவெறி
உரசியபடிச் கத்தியுடன்
மனிதம் எங்கிருக்கிறது
கருப்புப் விளிம்புகளில் பயணம்
எல்லாம் கும்மியை நோக்கியே
!

அந்த அழகிய நினைவுகள்

எங்கே மறப்பது
உன்னையும்
உன் நினைவுகளையும்...

ஞாபக முடிச்சுகள்
அவிழ்க்கப்படாமல்
இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன...

பச்சரிசி பல்வரிசையில்
பளீர் புன்னகை தானே
முதலில் வரவேற்கும்...

சிக்கல் இல்லாத
உன் நீண்ட கூந்தலில்
சிக்கிகொண்டது நானல்லவா?...

அன்று ஒரு நாள்
நீ கொடுத்த
காபியின் சுவை - என்
நுனி நாக்கில் இன்னும்...

கோவிலில்
நீ என்ன வேண்டிணாயோ?
சாமியை நோக்கி நீ நிற்க
உன்னை நோக்கி நான்...

இப்படியாய்
காதல் என்று சொல்லமுடியாத
அந்த அழகிய நினைவுகள்
வந்து கொண்டேயிருக்கின்றன
என்னுள்....

துளித்துளியாய்...

பார்க்காதே!
அவ்வாறு
என்னைப் பார்க்காதே!
நீயோ
உன் பார்வையால்
முழுவதுமாய் என்னை
அள்ளிச் செல்ல
நானோ
சிதறுண்டு போகிறேன்
துளித்துளியாய்....

தெருவோரப் பூக்கள்

யாருக்காக
எதற்காக
ஏன் பூத்திருக்கின்றன
இந்த பூக்கள்...

எங்கோ விழுந்து
ஏனோ முளைத்து
எப்படியோ வளர்ந்து
பூத்து நிற்கின்றன...

எத்தனையோ
பாதங்கள் கடந்திருக்கும்
கண்கள் பார்த்திருக்கும்
இந்த செடியை...

பார்க்காத கண்களும்
கடந்து போன பாதங்களும்
அவகாசம் கேட்கின்றன.
இந்த மலரை பார்க்கவோ?...
பறிக்கவோ?...

என்ன இது?...

உன்னை
என்னவென்று சொல்வது?...
நான் அழும்போது
என்னோடு அழுதவள்...
சிரித்தபோது
சேர்ந்து சிரித்த்வள் நீ.
எனக்காக இல்லாவிட்டாலும்
என்னோடு இருந்தவள்.
இன்றோ
எங்கிருக்கிறாயோ?
எப்படி இருக்கிறாயோ?
எல்லாம் முடிந்துவிட்டது.
இருந்தாலும்
மனம் மட்டும்
சொல்லிக்கொண்டிருக்கிறது
நாம்
சந்தித்திருக்க வேண்டாம் என்று...

யார் தான் கேட்பது?...

இப்போது அரசு சட்டம் கொண்டுள்ளது, கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென்று...

அச்சட்டத்தின் படி,

வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமாம்.

பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமாம்.

கார்களில் சீட் பெல்ட் அணிய வேண்டுமாம். சீட் பெல்ட் இல்லாத கார்களில் பொருத்த வேண்டுமாம்.

ஆட்டோ ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணிவது பற்றி பரிசீலித்து வருகிறோம்.

இதெல்லாம் சரிதான்.

சீக்கியர்கள் தங்கள் மத வழக்கப்படி தலையில் டர்பன் அணிந்திருப்பார்கள். அதனால் அவர்களுக்கு விலக்கு அளிக்கலாமா என்று அரசிடம் விளக்கம் கேட்கிறார்கள்.

அதுவும் சரிதான்.

ஆனால் 40+25=65+2 என்று போட்டுள்ள பேருந்தில் 100க்கு அதிகமான பேர் பயணிக்கலாமா?

அப்போது அவர்களுடைய பாதுகாப்பு என்னாவது?

இதை மட்டும் ஏன் யாரும் கண்டுகொள்வதில்லை...

நல்ல ஹெல்மெட் - கண்டுபிடிப்பது எப்படி?

இன்றைய தினசரிகளில் வந்த செய்தி - தலை கவசத்தை கட்டாயமாக்க ஆலோசனை!

இந்த பதிவு ஜெ.சந்திரசேகரன் அவர்கள் முன்பே இட்டுள்ளார். ஆனால் இன்னும் 10 நாட்களில் கட்டாய தலைகவசம் என்பதால் இது உதவும் என்ற எண்ணத்தில் இங்கேயும் இடுகிறேன்.


சென்னை வலை பதிவர் சந்திப்பின் போது, சில நண்பர்கள் கேட்ட கேள்வி - நல்ல தலை கவசம் - ஹெல்மட் தரம் அறிவது எப்படி? என்பதே!

அவர்களுக்குக் கூறிய தகவல்கள், மற்றவருக்கும் உபயோகமாய் இருக்க இப்பதிவு.

மூல பொருட்களை தெரிந்து கொள்ளுங்கள் :

ஃபைபர் க்ளாஸ் எனப்படும் கண்ணாடி நார்களை ஒன்றாக இணைக்க, ஒரு பைண்டர் ரெசின் (அசின் எப்படி விஜயோட ஒட்டிகிறாரோ, அதே மாதிரி பிசின் போல ஒரு ஈரப் பதம் உள்ள ப்ளாஸ்டிக் திரவம்). இதில் வெயிலில் மக்கிப்போகாமல் இருக்க ஒரு துளி யூ.வி ஸ்டெபிலைசர் ( UVStabilizer) மற்றும் ரெசினும் நாரும் சீக்கிரம் சேர்ந்து உறைந்து கெட்டியாக ஒரு செய்வினைவிரட்டி(Catalyst) ஒரு துளியும் சேர்த்து, கலந்து, தயாரிக்கின்றனர்.

ஹெல்மெட் வடிவிலுள்ள அச்சில் முதலில் ஒரு பூச்சு. அப்புறம் ஒரு பின்னிய கண்ணாடி நார் பூச்சு. மீண்டும் ஒரு கோட்டிங் ரெசின். இப்படியாக வேண்டிய அளவு தடிமன் கிடைக்க, பூச்சு மேல் பூச்சு பூசினால், அவை காய்ந்து, திடப் பொருளாகி, கிடைக்கும் வடிவமே ஹெல்மெட். இப்போது, கழுத்துப் பட்டி, அலங்கார ஸ்டிக்கர், மற்றும் உள்ளே தலையை ஒட்டிய பஞ்சு லைனிங், துணி லைனிங் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு Hல்மெட் உருவாகிறது. சரி, இதிலென்ன ப்ரச்னை என்கிறீர்களா?

கலப்படத்துக்கு பேர் போனவர்கள் இந்த இழையிலும், ரெசினிலும், கலப்படம் செய்ய ஆரம்பித்து, வழக்கமாய் ரோட்டோரம் விற்கப்படும் ஹெல்மெட்டுகளை தயாரிக்க ஆரம்பித்து ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆகின்றன! முதலில் ரெசினை எடுத்து கொள்வோம். நல்ல பாலிஎஸ்டர் மற்றும் ஈபாக்ஸி ரெசின்களை உபயோகித்தால், அவை நல்ல இருகுத்தன்மை உள்ளவையாக இருக்கும். இவை தொழிற்சாலைகளில் பைப்புகள், மின் தாங்கிகள், கூரைகள் போன்றவை செய்ய உபயோகிக்கப் படுகின்றன. ஆனால், அதற்கு மாற்றாக, ஆமணக்கு போன்ற தாவரங்களில் இருந்தும், நீர் கலந்தும், கொஞ்சம் போல் பெயின்டில் உபயோகிக்கும் தின்னர் கலந்தும் செய்யப்படும் ரெசின்கள் நீர் போல் குறைந்த பசைத்தன்மை உள்ளதால், அதிக பரப்பளவில் பூசப்படும். உதாரணம்: நல்ல ரெசினால், சுமார் ஒரு சதுர அடி பூச முடியுமானால், இந்த கலப்பட ரெசினால், சுமார் நான்கு சதுர அடி பூசிவிட முடியும்! ஹெல்மெட் செய்பவர்க்கு ரெசின் செலவு குரையும். ஆனால், அணிபவர்க்கு? மிக மெலிய பூச்சு கொண்ட ரெசின் சீக்கிரம் மக்க ஆரம்பித்து, பொடிப் பொடியாக ஆரம்பிக்கும் (மேலே அடிக்கப்பட்டுள்ள பெயிண்டினால் கண்ணுக்குத் தெரியாத அளவுகளில்!).

அதேபோல், கண்ணடி இழைகளிலும், C க்ளாஸ், E க்ளாஸ் என, நல்ல தாங்கு சக்தி உள்ள பலவகை இழைகள் உள்ளன. அவற்றை விட மிக குறைந்த விலையில், தரக் கட்டுப்பாட்டில் தனியே ஒதுக்கப் பட்ட இழைகளும், சீன மார்க்கெட்டுகளிலிருந்து மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற இழைகளும் கொண்டு தயாரிப்பாளர்கள், தங்களது செலவுகளைக் குறைக்க இது போன்ற தரமற்ற மூலப் பொருட்களை வாங்கி ஹெல்மெட்டுகள் செய்கின்றனர். என்னய்யா இது, அதற்கு மேலேதான் ISI முத்திரை இருக்கிறதே என்றால், அதுவும் போலி! சும்மா ஒரு ISI முத்திரை போல் ஸ்க்ரீன் பிரின்டிங் செய்துவிட்டால், போலி ஹெல்மெட் தயார்!

அட, எப்படி இதை தெரிந்து கொள்வது?

1. விலை - நல்ல fஃபைபர் ஹெல்மெட் கட்டாயம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாது. அதைவிட கம்மியாக விற்பனைக்கு வந்தால், 2ஆம் சோதனையை மேற்கொள்ளவும் :-

2. முடிந்தால் உள்ளே தைக்கப் பட்டுள்ள துணியை விலக்கிப் பார்க்கவும். கரடு முரடாக இழைகள் தெரிந்தாலோ, அல்லது, இடை இடையே மண் துகள்கள் போல் தெரிந்தாலோ (ஆம்! மண் துகள்கள்தான்! எடையை கூட்ட அதிக ரெஸினை இழுக்காமல் இருக்க போலி ஹெல்மெட் தயாரிப்பவர்கள் மூலப் பொருளில் மண்ணைக் கூட சேர்ப்பார்கள்.) கட்டாயம் அது தரமானது அல்ல. வாங்காதீர்கள்.

3. எடை - தேங்காய் அல்ல ஹெல்மெட்! எடை அதிகமாக, அதிகமாக, தலையைக் காப்பாற்றும் (அடிவாங்கும்) சக்தி அதிகம் என்று நம்பாதீர்கள். நல்ல ஹெல்மெட் அதிகம் போனால் சுமார் 800 கிராமிலிருந்து, 2 கிலோவுக்கு மேல் எடை பெறாது.

இப்போது இந்த ரெஸின்+கண்ணாடி இழை ஹெல்மெட்டுக்களை விட இஞ்சக்க்ஷன் மோல்டிங் செய்யப்படும் மெலிதான ஆனால் வலுவான ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன. இவற்றைப் பார்த்தாலே சொல்லிவிடலாம். மேலே பெயின்டிங் ஏதும் செய்திருக்கப் படாது. உள்ளே இழைகள் கைகளை நெருடாது; உள்ளே, வெளியே அதன் பளபளப்பும் மிருதுவான பரப்பும் ஒரே மாதிரியாக இருக்கும். குண்டு துளைக்க முடியாத Polycarbonate, வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட ரப்பர் கலந்த ABS ம் கலந்து மோல்டிங்க் செய்யப்பட்ட இந்த ஹெல்மெட்டுகள், சுமார் 2000 முதல் 3000 ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன! அதுதான் கனமும் குறைவு, பயமும் குறைவு! அதில் கலப்படம் செய்வதும் கஷ்டம். ஏனெனில், ஒரு மோல்டிங் அச்சு செய்ய குறைந்த பட்சம் 20 லட்சங்கள் வேண்டும். தரமான தயாரிப்பாளரே, அம்மாதிரியான அச்சுகளை செய்ய முடியும். கலப்படக் காரர்களுக்கு அவ்வளவு பணம் போட்டு செய்ய மனம் வராது. Steelbird, Studd, Protech போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் ஹெல்மெட்டுகள் தரமானவை. அவர்களது நேரடி விற்பனை நிலையங்கள் எல்லா முக்கிய நகரங்களிலும் உள்ளன.

அரசாங்கம் கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டத்தை போடுமுன், முதலில், இம்மாதிரியான தகவல்களை நாளிதழ்களில் வெளியிட்டு, கலப்படக் காரர்களை இருட்டடிப்பு செய்தால்தான் நம் தலை தப்பும்! சட்டம் போட்டதற்கும் பலன் இருக்கும்.

எனக்கு தெரிந்த சில நண்பர்கள், ரோட்டோரம் வாங்கிய ஹெல்மெட்டுகள் அணித்ததால், இறந்து போயுள்ளனர்! எப்படி? அந்த தரமற்ற ஹெல்மெட்டே அவருக்கு காலனாய் அமைந்துவிட்டது! அந்த ஹெல்மெட் சம்பவ இடத்திலேயே நொறுங்கி, தலை அதனுள்ளே சிக்கி, உடைந்த சில்லுகள் தலையில் தைத்து, அதனாலேயே, தலையும், தலைக்குண்டான உயிரையும் காப்பாற்ற முடியாமல் போனதுதான் பரிதாபம்!

எனவே, நண்பர்களே உஷார்!! இது நம் வாழ்க்கை ப்ரச்னை. நம்மை நம்பி, வீட்டில் காத்திருக்கும் குடும்பத்தாரின் ப்ரச்னை. ஆயிரம் ரூபாய் அதிகம் போட்டு சட்டை வாங்கினாலும், குறைந்த விலையில் தரமான காதியில் கதர் அணிந்தாலும், நம் மதிப்பு, நம் நடத்தையிலேயே உள்ளது.

ஆனால், ஹெல்மெட் போன்ற தலைக் கவசங்களில் நாம் காசு மிச்சம் பிடிக்கப் பார்த்தால், அப்புறம் வீட்டிலுள்ளவர்கள் நாம் திரும்பி வரும் வரை இன்னொரு கவசத்தை நம்ப வேண்டியது தான்!

அது - கந்தர் சஷ்டி கவசம்!

நன்றி : ஜெ.சந்திரசேகரன்


சென்னை வலைபதிவர் மாபெரும் மாநாட்டின் தகவல்கள்

சென்ற சனிக்கிழமை மாலை நாமக்கல் சிபி, தேவ், கப்பியார், J K ஆகியோர் பங்கு கொண்ட மாபெரும் வலைபதிவர் மாநாடு சென்னை பெசன்ட் நகர், கடற்கரையில் நடந்தது. சனிக்கிழமை மதியம் அலுவலகம் முடிந்ததும் கிளம்பி திருமங்கலம் சென்று, அலைபேசியில் தொடர்பு கொண்டு நாமக்கல் சிபி அலுவலகம் போய் சேர்ந்தேன். நேரில் பார்த்த்தும் இருவர்க்கும் அப்படியொரு மகிழ்ச்சி. (இருக்காதா பின்ன, ஒரே ஊர்காரங்கல்ல). அலுவலக பதிவேட்டில் கையொப்பம் வாங்கிகொண்டு அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.

பின் தேநீர் அருந்தும் போது அவர் ஆரம்பித்த அலைபேசி உரையாடல்(யாருடனோ?...) நான் தேநீர் அருந்திவிட்டு தினத்தந்தி நாளிதழையும் முழுமையாக படித்த பின்பும் நீண்ண்ண்டுகொண்டேயிருந்தது. பின் எனக்கு ஒரு ஐந்து நட்சத்திர மிட்டாய் கொடுத்தார். (அதாங்க 5 star சாக்லெட்).

பிறகு இருவரும் நண்பருடைய வண்டியில் கிளம்பி, சாலையில் இடது ஓஓஓரமாகவே பெசன்ட் நகர் வந்தோம். சர்ச்சுக்கு அருகில் ஒரு கடையில் தேநீர் அருந்திவிட்டு நின்றபோது, கப்பி எதிர்பக்கம் நின்று கொண்டு அலைபேசியில் அழைத்தார். அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தபோது தேவ் இருந்து எங்கிருக்கிறீர்கள் என்று அழைப்பு. அவரும் நின்றது எங்களுக்கு எதிர்புறம் தான். பின் நால்வரும் ஒரு சந்தில் வண்டியை நிறுத்திவிட்டு தார்சாலையை ஒட்டியுள்ள சுவர்மீது அமர்ந்து பேச ஆரம்பித்தோம்.

எங்க பேச்சு, வ. வ. ச., மொக்க மற்றும் கும்மி பதிவு, தேவ்வின் கல்லூரி கலாட்டா என்று சுவாரஸ்யமாக சென்றது. அவ்வப்போது தேவ்க்கு திரைப்படத்திற்கு செல்லலாம் என்று நண்பரிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வந்துகொண்டேயிருந்தது. நாங்கள் இங்கிருக்கும் போது விழியன் அவர்கள் மெரினாவில் இருந்து அலைபேசியில் பேசினார். இந்த மாநாடு அப்படியே 8 மணி வரை தொடர்ந்த்து.

பின் எழுந்து வண்டி இருந்த இடத்திற்கு வந்து கைகுலுக்கிவிட்டு தேவ் கிளம்பிவிட்டார். பின் நாமக்கல் சிபி தனது காதல் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். அப்படியே 8.40 வரை நின்று கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். பின் நாங்களும் கைகுலுக்கிவிட்டு கிளம்பினோம். 9.15 க்கு என் அறைக்கு வந்துவிட்டு உடல் சூடாக உள்ளது என்று தனிக்க அக்கா மாலா அருந்த சென்றோம். அங்கு அண்ணன் கசிய விட்ட செய்தி அன்று அவருக்கு பிறந்த நாளாம். அப்போதுதான் புரிந்தது எனக்கு மதியம் ஏன் ஐந்து நட்சத்திர மிட்டாய் வழங்கினார் என்று. 11.30 க்கு அறைக்கு வந்து சாப்பிட்டுவிட்டு உறங்கச்சென்றோம்.

சில சுவாரஸ்யமான சில தகவல்கள்:

1. கப்பியாரிடம் கோவி கண்ணன் சொந்த வேலையாக சென்னை வந்திருப்பதாகவும், நேரில் சந்திக்கலாம் என்றும் இந்த சந்திப்பு ஏற்படாயிற்று.

2. முதலில் கோவி கண்ணன் என்று சொல்லிக்கொண்ட நாமக்கல் சிபி, நான் அவருடைய நண்பர், நாகப்பட்டினம் என்றும் அறிமுகம் செய்து கொண்டது. கடைசியில் தான் உன்மையை கூறினோம். இது தேவ்க்கு முன்பே தெரியும்.

3. நாங்கள் பேசிகொண்டிருந்தபோது எதிரில் வந்து பார்க் செய்யப்பட்ட டிராவல்ஸ் "இண்டிகோ" காரின் உள்ளே நடந்த சென்சார் விசயங்கள்.

4. நாங்கள் சென்ற வண்டியில் "சைடு லாக்" வேலை செய்ய வில்லை. திரும்ப வந்து வண்டியை பார்க்கும் வரை, வண்டி இருக்குமோ இருக்காதோ என்ற பயத்திலேயேதான் இருந்தேன்.

5. "கைகுலுக்கிவிட்டு" என்று போட்டுள்ளது ஏன் என்றால் முக்கியமான சந்திப்புகளின் இறுதியில் கைகுலுக்க வேண்டும் என்று தேவ் கூறினார்.

இப்படி எங்களது சென்னை மாபெரும் வலைபதிவர் மாநாடு இனிதே நிறைவு பெற்றது.